பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம் بليم تركي

"கான்யாறு தgஇய அகல்நெடும் புற வில் சேண் நாறு பிடவமொடு டிைம்புதல் எருக்கி வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக் காட்ட இடுமுட் புரிசை எமுற வளை இப் படு நீர்ப் புணரியிற் பரந்த பாடி’

(بك س2 ستمر سa . نULة (65 نpa))

என்பதனாலும் அறிக.

வஞ்சி தானே முல்லையது புறனே.

நச் : இது, தம்முண் மாறுபாடு கருதி வெட்சித்திணையை நிகழ்த்திய இருபெரு வேந்தருள் தோற்றோ னொருவன் ஒருவன் மேற்செல்லும் வஞ்சித்திணை அகத்திணையுள் இன்னதற்குப் புறனா மென்கின்றது. வஞ்சியென்றது ஒருவர்மே லொருவர் சேறலை. அதற்கு வஞ்சி சூடிச் சேறலும் உலகியல்.

(இ.ஸ் ) வஞ்சி தானே-வஞ்சியெனப்பட்ட புறத்திணை; முல்லையது புறனே-முல்லை யெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு.

ஏனை உழிஞை முதலியவற்றினின்று பிரித்தலின் ஏகாரம் பிரி நிலை. பாடாண்டிணைக்குப் பிரிதலின்மையிற் பாடாண் பகுதி சைக்கிளைப் புறனே" (தொ-பொ புற-உச) என்ப. ஏனைய பிரித்துக் கூறுவர். முதலெனப்பட்ட காடுறையுலகமுங் கார் காலமும், அந் நிலத்திற்கேற்ற கருப்பொருளும், அரசன் பாசறைக் சட் டலைவியைப் பிரிந்து இருத்தலும், அவன் தலைவி அவனைப் பிரிந்து மன்னவயி னிருத்தலுமாகிய உரிப்பொருளும் ஒப்பச் சேறலின், வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று. வெஞ்சுடர் வெப்பம் நீங்கத் தண்பெயல்பெய்து நீரும் நிழலும் உணவும் பிறவும் உளவாகிய காட்டகத்துக் களிறு முதலியவற்றோடு சென்றிருத்தல் வேண்டுதலின் வஞ்சிக்கும் அம் முதல் கரு வுரியும் வந்தனவாம். முல்லைப்பாட்டினுட்,

1. போர்த்தொடக்கமாகிய வெட்சித்திணை நிகழ்ச்சியில் ஈடுபட்ட வேந்தர் இருவருள் தோற்றோனொருவன் மாற்றான் மேற்செல்வது வஞ்சித்தினையாம் என வேட்சிக்கும் வஞ்சிக்கும் உள்ள இணைபினைப் புலப்படுத்துவர் நச்சினார்க் கினியர். இதனால் தோற்றோன் மேற் படையெடுத்துச் செல்லுதல் வஞ்சியாகாது என்பது அவர் கருத்தாதல் பெறப்படும். -