பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உக 历.9.盗门

இது கண்ணகி காரணமாக வையாவிக்கோப்பெரும் பேகனைப் பரணர் பாடிய கைக்கிளை வகைப் பாடாண்பாட்டு.

கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென வினவ, 山r卤 கிளையல்லேம் முல்லை வேலி நல்லூர்க்கண்ணே வருமென்று சொல்வாளெனக் கூறுதலின், அஃது ஏனைக் கைக்கிளைகளின் வேறாயிற்று.

கன்முழை யருவி என்னும் (கசள) புறப்பாட்டும் அது.

தொக்க நான்கும் உள என மொழிப-அந்நான்கும் முற். கூறிய ஆறனோடே தொக்குப் பத்தாய்ப் பாடாண்பகுதிக் கண்ணே உளவாய் வருமென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

தொக்க நான்' கென்றதனான் இந்நான்கும் வெண்பாவும் ஆசிரியமுந் தொக்குநின்ற மருட்பாவானும் வருமென்பது உம் கொள்க. இவற்றை மேல் வருகின்றவற்றோடு உடன்கூறாரா யினார்; அவை இழிந்தோர் கூறுங் கூற்றாகலின். (கூடு) பாரதியார்

8. සී)

கருத்து :- இது, முன் :பாடான் பகுதி-நாடுங்காலை நாலிரண்டுடைத்து' எனச் சுட்டிய பாடாண் வகைப் பொருள் எட்டினியலும் பெயரும் கூறுகிறது.* w

பொருள் :- (1) கொடுப்போரேத்தி-கொடுக்கும் வள்ளல் களைப் புகழ்தலும்:

1. பாடாண் வகைப் பொருள் எட்டின் இயலும் சுட்டுவது இச்சூத்திரம் என்னுங் கருத்தில் நாவலர் பாரதியார் அவர்கள் உரை அமைந்துளது. இதற்கண் *கொடுப்போரே த்திக் கொடார்ப் பழித்தல் முதலாக வே வினோக்கிய விளக்கு நிலை என்பதறாக ஆறும், வாய்றை வாழ்த்து, செவியறிவுறாஉ; புற நிலை வாழ்த்து, கைக்கிளைவகை எனத் தொகுத்த நான்கும் ஆகப் பத்துத் துறைகள் எண்ணிப் பெற்றன. பாடாண் பகுதி நாலிரண்டினையும் அமரர் கண் முடியும் அறுவகையாயினும் வழங்கியன் மருகின்’ என வரும் இரண்டு நூற்பாக்களிலும் கொல்காப்பியனார் விரித்துக் கூறினமையானும், இதன் கண் கொடுப்போரேத்திக் கொடார்ப்பழித்தல்’ என்ற ஒரு துறையினையே கொடுப்போரேத்தல், கொடர்ப் பழித்தல் என் இரண்டாக்கியும் வாயுறை வாழ்த்து முதலிய நான் கினையும் ஒரு துறையாகத் தொகுத்தும் இவ்வாறு எண் வகையாகக் கொள்ளும்படி ஆசிரியர் சூத்திரஞ் செய்தாரென்றல் ஆ நிழலின் அறியத் தோன்றி நாடுதலன்றிப் பொருள் நனிவிளங்க அமைக்கும் தொல்காப்பியனாரது நூற்பாவமை க்கு ஒவ்வாமையினும் இந்நூற்பா பாடாண் வகைகளைச் சுட்டுவதாயின் பாடாணியல் புணர்த்தும் பாடாண் பகுதி கிென் புறனே தி டுங்காலை நாலிசன்9 டைத்தே என்னும் நூற்பாவை அடுத்து அமைந்திருத்தல் வேண்டுமாதலாலும், நாவலர் பாரதியர் கருதுமாறு கொடுப்போரேத்தில் முதலாகவுள்ள இவையே ur-T514-6ಠರ್ಶನ வகையாயின் 'அமரர்கண் முடியும் வழங்கியன் மருங்கின் என்னும் நூற்பாக்களிற் கூறப்பட்டவை பா டாண்டினையின் வகைகளா இன்றித் துறைகளா என்னும் ஐயம் கற்போர்க்குத் தோன்றுதல் இயல்பாதலானும் கொடுப் ரேத்திக் கொடார்ப்பழித்தல் முதலாகவுள்ள பத்தினையும் பாட்ாண்டினையின் துறைகளாகக் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும்.