இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சனி மாமா எனக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது:
(சிந்தித்து) ஓ ! காரணம் புரிகிறது மாமா.
வியா என்னடாப்பா அது ?
சணி
- மாமா ! என்னுடைய சாத் திரப் பை இங்கே இருக் கிறது இல்லையா? அது மிகவும் மேன்மையான சாத் திரம். நிறைந்த மங்களம் அமைந்தது. அது இருக்கிற இடத்தில் தீமையே வராது. அது இந்த வீட்டில் இருப்பதால்தான் களங்கத்தாலே வேலை செல்ய முடியவில்லை. அதைத் தாருங்கள். அதை எடுத்துக் கொண்டு நான் போய்விடுகிறேன். அப் புறம் நடப்பதைப் பாருங்கள்.
வியா : அப்படியா ...... இதோ அதை எடுத்துக்
கொண்டு வருகிறேன். (எடுத்து வந்து தருகிருர்).
சனி : மாமா நான் போய் வருகிறேன்.
கதி
- மாமா மன்னிக்க வேண்டும் வீணுகப் பதட் டப் படாதீர்கள். உங்கள் கருத்துப்படியே திரு கணம் மங்கலமாக முடிந்து விட்டது. உங்கள் மாப்பிள்ளை சனி, இனி இந்தத பக்கம் தலை காட்டவே மாட்டான், சாத்திரப் பைக்காகத்தான் காத்துக் கிடந்தான். அது கிடைத்ததும் தப்பித் தோம் பிழைத்தோம் என்று ஓடிப்போய் விட்டான்.
நடந்ததை மறந்து எங்களை வாழ்த்துங்கள்.
வியா அவனும் சேர்ந்து எல்லாரும் போட்ட திட்டம்
தானு சரி, சரி வாழ்ந்து தொலையுங்கள். வாழ்ந்து தொலையுங்கள். -
(-திரை விழுகிறது-)