பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பார்வதிபாய் அதவலே உடனே வரைந்து விடுத்த அழைப்புக்கடிதமே அக் கடிதம். மாதம் நூறு ரூபாய் வருமானம் பெற்றுக்கொண்டு இரண்டு ஆண்டுகட்குக் குறையாமல் அக் கல்லூரியில் கணி தபாடம் க ற்பிக்கும் ஒப்பந்த த்தோடு அப் பதவியை நம் கார்வே ஏற்றுக்கொள்ள வேண்டியவராய் இருங்தார். அப்போது இருவருக்கு மாதம் .175 ரூபாய்-. களுக்குக் குறையாது வருமானம் வருவதாய் இருந்தது. இருந்தும், அக் கல்லூரிகம் காட்டின் கல்விவளர்ச்சிக்கெனவே ஏற்பட்டுள்ளகாரணங் கருதி இவர் அப் பதவியை உடனே ஏற்றுக்கொள்ள இசைந்தார்.

  1. .

பெரியார் கார்வேமனைவியார் அப்போது உடல்நலமின்மை கருதி மூருட் பதிக்குச் சென்றிருந்தார். நம் பெரியார் அக்கல்லூரியில் தம் ஆசிரியப்பதவியை ஏற்றுக்கொள்ளப் புனுகுகருக்குப் புறப்படும்போது அவ்வம்மையார் ஆருயிர் நீத்தார் என்னுஞ் செய்தி எட்டியது. அப்போது அடித்த புயற்காற்றின் மிகுதியினுல் நம் கார்வே உடனே தம் ஊருக்குச் செல்ல இயலாதவராயிருந்தார். பெர்க்யூசன்கல்லூரியில் கணிதப் பேராசிரியராய் அமர்ந்து பேரும் புகழும் பெறவேண்டிய கிலேயில் இருந்த நம் பெரியார் கார்வே எதிர்பாராது நேர்ந்த இத் துயரத்தால் பெரிதும் திகைக்கலாயினர். அம்மையார் இராதாபாயின் பிரிவு நம் பெரியாரின் வாழ்க்கைநிலையினை முற்றிலும் மாற்றுவதாய் இருந்தது. அப்போது தம் பெரியாருக்கு வயது 33. மறுபடியும் ஒரு சிறு ைெய