பக்கம்:நல்வழி நயஉரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒளவையார் அருளிய
நல்வழி


கடவுள் வாழ்த்து


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே எேனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.


அழகு செய்கின்ற உயர்ந்த யானை முகத்தை உடைய தூய மாணிக்கப் பிள்ளையாரே! பாலும் தெளிந்த தேனும் வெல்லப் பாகும் பருப்பும் ஆகிய இந்த நான்கு பொருள்களையும் ஒன்று கூட்டிப் பதம்செய்து நான் உனக்குப் படைப்பேன். சங்கம் வளர்த்த இயல் இசை கூத்து என்னும் மூன்று தமிழையும் நீ எனக்கு அருளுக.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/8&oldid=1289781" இலிருந்து மீள்விக்கப்பட்டது