பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரித்தது. இந்த இடத்திலே புதையல் இருக்குது; அது நமக்குக் கிடைக்கும் என்று குறிகாரன் சொல்லியிருக்கான்; பள்ளம் தோண்டை யிலே பானை எதுவும் தெரிந்தால், விட்டுவிடாதீங்க. அப்படி புதையல் பானை கிடைத்தால், எங்களுக்கு பங்கு கொடுக்கணும் என்று அவள் சொன்னாள். கிடைத்தால் தருகிறேன் என்று அப்பா கூறினார். அண்ணன் மனைவி வரிசையாரை (மதனியை) கேலி செய்யும் சமூக உரிமை கொழுந்தனுக்கு உண்டு. அப்பாவும் அவளை பரிகசிப்பதில் ஆர்வம் கொண்டார். - சுவரமைக்க வானம் பறிக்கும் போது, இப்ப ஒரு வேடிக்கை பண்ணலாம்; பெரிய பானை தென்பட்டது என்று சொல்லி பெரியம்மையை ஏமாற்றலாம் என்று கூறி அவளை அழைத்து வரும்படி அண்ணனை அனுப்பினார் அப்பா, அண்ணன் போய் சொன்ன உடனேயே அந்த அம்மாள், செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு, அரக்கப் பறக்க அவசரம் அவசரமாக வந்தாள். அவள் பரும்பட்ட மனுவி ஒரு கால் வாதநோய் வந்து, சீராக நடக்கமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அவள் காலை இழுத்து இழுத்துப் போட்டு வேகநடை நடந்து வந்தது தமாஷாக இருந்தது. திருக்குறுங்குடி நொண்டி ஆனை வாறவரத்தைப் பாரேன் என்று அப்பா மெதுவாகக் குறிப்பிட்டார். அந்த அம்மாளுக்கு சொந்த ஊர் திருக்குறுங்குடி அக்காலத்தில் அவ்வூர் கோயிலில் வளர்ந்த யானை நொண்டி நொண்டி நடக்கும் தன்மை பெற்றிருந்தது. எனவே, பெரியம்மையையும் திருக்குறுங்குடி நொண்டியானை என்று அப்பா பரிகாசமாகக் குறிப்பிடுவது வழக்கம் அவள் வரும்போதே புதையல் எங்கே? புதையலை வெளியே எடுத்தாச்சா? என்று பதற்றமாகக் கேட்டபடி வந்தாள். 'அந்த மூலையிலே மண்வெட்டி விழுந்த போது டங்கென்று சத்தம் கேட்டது. ஜாக்கிரதையாக மண்ணைத் தோண்டவும் ஒரு வெண்கலப்பானை தென்பட்டுது. அந்த ஆளு அதன் விளிம்பைப் புடிச்சு இழுக்கான் இழுக்க முடியலே. இன்னொருத்தனும் சேர்ந்து வேகமாக நிலைபெற்ற நினைவுகள் 38 49