பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அடிமை நாடாய் இத்தாலி
அல்லற் பட்ட நேரத்தில்
விடுதலை பெறவே உழைத்தவராம்
வீரத் தலைவன் கரிபால்டி

அவரது வாழ்க்கை வரலாறே
அந்தப் பரிசுப் புத்தகமாம்.
சுவைமிகும் அந்த நூல்படித்தே
சுதந்தர உணர்ச்சி பெற்றனராம்.


39