பக்கம்:பச்சைக்கனவு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 () லா, ச. ராமாமிருதம்

வயிறு எரிந்து போய்விட்டது, கன்னத்தில் அஞ்சு விரலும் பதிஞ்சிருந்ததைப் பார்த்ததும்.

காந்தி: ஏண்டி காந்தி:-' ரேழியறை ஜன்னலில், காந்திமதி மன்னி உட்கார்ந் திருந்தாள். ஒரு காலைத் தொங்கவிட்டு ஒரு காலைக் குத்திட்டு, அந்த முட்டிமேல் கைகளைக் கோத்துக் கொண்டு. கூந்தல் அவிழ்ந்து தோளில் புரள்வது கூட அவளுக்குத் தெரியவில்லை. அவள் கண்களில் கோபக் கனல் விசிற்று. உள் வலியில் புருவங்கள் நெரிந்து, கீழ் உதடு பிதுங்கிற்று. அம்மாவைக் கண்டதும் அவள் எழுந்திருக்கக் கூட இல்லை.

'ஐயையோ!' என் பக்கத்தில் சின்ன மன்னி நின்று கொண்டிருந்தாள். முழங்கையையிடித்துக் காதண்டை, 'காந்தி மன்னிக்கு வெறி வந்திருக்கு’ என்றாள்.

காந்தி மன்னிக்கு இப்படி நினைத்துக்கொண்டு, இம்மாதிரி முன்னறிக்கையில்லாது குணக்கேடு வந்துவிடும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ மூன்று நாட்களுக்குக் கதவையடைத்துக் கொண்டு விடுவாள். அன்ன ஆகாரம், குளி ஒன்றும் கிடையாது. சந்திரனை ராகு பிடிப்பதுபோல் பெரிய மனச்சோர்வு அவளைக் கவ்விவிடும். அப்போது அம்மா உள்பட யாரும் அவள் வழிக்குப் போக மாட்டார்கள்.

காந்தி மன்னியின் வாழ்வே தீராத் துக்கமாகி விட்டது. சின்ன மன்னி அப்புறம் என்னிடம் விவரமாய்ச் சொன்னாள். என்னால் நிஜமாகவே கேட்கவே முடிய வில்லை. காதையும் பொத்திக் கொண்டு கண்ணையும் இறுக மூடிக்கொண்டு விட்டேன். அந்தக் காrதியை நினைத்துப் பார்க்க முடியவில்லை. உங்கள் இரண்டாவது அண்ணா, தீபாவளிக்குச் சீனி வெடி வாங்கப் போய்ப் பட்டாசுக் கடையில் வெடி விபத்தில் மாட்டிக்கொண்டு விட்டாராமே! எந்த மஹாபாவி சிகரெட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/119&oldid=590777" இலிருந்து மீள்விக்கப்பட்டது