பக்கம்:பச்சைக்கனவு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபூர்வ ராகம் O 23

அவளைப் பற்றி நினைப்பதுமில்லை. ஆயினும் ஏதாவது ஒரு சமயம், இப்பொழுது நடக்கும் ஏதேனும் ஒரு சம்பவம் பழைய நினைவுகளைக் கிளப்பிவிட்டு, நெஞ்சு படபட்க்கையில், அது பழைய ரத்த வேகத்தின் சாயையோ அல்லது வயதான கோளாறுதானோ என்று சந்தேகமா யிருக்கிறது.

அபூர்வ ராகம், அதே வக்கரிப்பு, பிடாரன் கை பிடிபடாத பாம்புபோல், அபாயம் கலந்த படபடப்பு, ஸ்வரஸ்தானங்கள் பிடிபடாது, பழகப்பழக எல்லையே யற்றதுபோல், நடையுடை பாவனைகளில் சிந்தும் ஒரு கவர்ச்சி, வேட்டையில் வேடுவன் மேல் பாயத் திரும்பிய மிருகம்போல் பயந்த ஒரு முரட்டுத்தனம், சிவிர்சிலிப்பு.

அவள் அம்மாவை மயக்கிவிட்டாள். அம்மாவுக்கு வேண்டிய பணிவிடை, பக்தி, ஆசாரம் எதிலும் குறைய வில்லை. வந்த புதிதில் ஏதோ ஒரு விசேஷ தினத்தன்று படங்களுக்குச் பூச்சூட்டி விளக்கு ஏற்றி, எதிரில் நிவேதனங்களை வைத்துக் கொண்டு அம்மா, ஒவ்வொரு நாமமாய், அrர சுத்தமாய் சாவதானமாய்ச் சொல்லி அர்ச்சித்துக் கொண்டிருக்கையில், என் வயிற்றில் பசி எலிபோல் பிராண்டுகையில், அவள் கண்களை மூடி கற்பூரக் கொழுந்தென அசைவற்று நிற்கும் பரவசம் கண்டு பகீரென்றது. அம்மா ஏதோ காரியமாய்ப் பின்கட்டுக்குச் சென்றதும் சமையலறையில் நுழைந்தேன்.

"நான் ஒரு பாவி'- என்று ஆரம்பித்தேன்.

மூடுசூளையாய்ப் பேசுவதிலேயே எனக்கு ஒரு ஆசை, நான் இதுவரை அவளுடன் பளிச்செனப் பேசியதில்லை. மிருகங்கள் வாய் திறவாது ஒன்றையொன்று புரிந்து கொள்வது போல், நாங்கள் அர்த்தமற்ற, அல்ல அர்த்தம் மறைந்த வார்த்தைகளைப் பேசியே ஒருவரையொருவர் அர்த்தம் கண்டு கொள்வதில் ஒரு இன்பம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/32&oldid=590690" இலிருந்து மீள்விக்கப்பட்டது