பக்கம்:பச்சைக்கனவு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாகடிாயணி O 75

'நீங்கள் புன்னகை புரிந்தீர்கள். ஐந்து வயதில் நான் கோலியாடினபோது என் தகப்பனார் என்னைக் கன்னத்தில் அறைந்து இழுத்துவந்து சுவரோடு ஒட்டி வைத்துச் சொல்லிக் கொடுத்த நாளிலிருந்து சாதகம் பண்ணி வருகிறேன். எங்கள் குடும்பம் நினைவு தெரிந்த மூணு தலைமுறையாகச் சங்கீதப் பரம்பரை. அப்படி இருந்தும் சங்கீதத்தைப்பற்றித் தெரியும் என்று சொல்லிக் கொள்ளத் தைரியம் வரவில்லையே!”

"அப்பாவுக்கு இன்னும் ரோசம் வந்துவிட்டது. நான் சங்கீத சபைப் பிரஸிடெண்டு என்று தெரியுமோன்னா?' '

"ஓஹோ அதனால் திறப்பு விழாவில் கட்டடத்தின் கதவை கரகோஷங்களிடையே வெள்ளிச் சாவி போட்டுத். திறந்தவர் கட்டடத்தைக் கல்மேல் கல்வைத்துக் கட்டினவர் ஆய்விடுவாரா? அல்லது உங்கள் தர்க்கப் பிரகாரம் ஆகிவிடவேணுமா?

அப்பாவுக்கு முகத்தில் ரத்தம் தெறித்தது. சடேரென்று நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு எழுந்தார்.

என் வீட்டிலேயே என்னை அவமானப்படுத்த உம்மை இங்கு அழைத்து வரவில்லை!"

நீங்களும் விடவில்லை. உங்களுக்குப் பிடித்தமான தைப் பேசவும் நான் இங்கு வரவில்லை. நானாகவும் வர வில்லை. உங்கள் பெண்ணுக்குப் பாட்டுச் சொல்லித்தர வேண்டும் என்று நீங்களாக என்னைத் தேடிக் கேட்டு அழைத்து வந்தீர்கள் என்பதை உங்களுக்கு நினைவு மூட்டுகிறேன்."

ஆமாம், சபா காரியதரிசி உங்களைப்பற்றிப் பிரமாத மாகப் புகழ்ந்தார். நீங்கள் நாளடைவில் ரொம்பவும் பிரபலமாகப் போகும் பெரிய புள்ளி என்று இன்னும் ஏதேதோ சொன்னார். எனக்கும் என் பெண் எதிலும் சிறந்ததையே அடையவேண்டும் என்னும் அவா உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/84&oldid=590742" இலிருந்து மீள்விக்கப்பட்டது