பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506

பன்னிரு திருமுறை வரலாறு


கள், தத்தமக்கு உரிய புலனுணர்வினக் கொள்ளும் ஆற்றலே இழந்த ஐம்பொறிகள் போலச்சிறிதும் பயனில் லாதன என் பார்,

கோளில் பொறியிற் குண மிலவே எண் குணத்தான் தாளே வணங்காத் தலே.

என்ருர் தெய்வப்புலவர். காணுத கண், கேளாத செவி முதலியன போல, இறைவனே வணங்காத தலே களும் பயனில என்பதாம். இவ்வாறு சிறப்புடைய அங்கமாகிய தலைமேல் வைத்துக் கூறினுரேனும், உட லுறுப்புக்கள் என்ற இனம்பற்றி இறைவனே வாழ்த்தாத தா, அவனது ெய | ரு ஸ் சே ர் புகழுரைகளைக் கேளாத செவிகள் முதலிய ஏ னேய அங்கங்களும் அவ் வாறே பயனில் என்பதும் குறிப்பினுற் கொள்ள வைத்தார். இக் குறிப்பினே நன்குணர்ந்து மக்கள் எல் லோரும் தம்முடைய தலே. கண், செவி, மூக்கு, வாய், நெஞ்சு, கைகள், யாக்கை, கால்கள் ஆகிய அங்கங்கள் யாவும் இறை வழிபாட்டில் எளிதில் ஈடுபட்டு இன்புறும் இயல்பினவாகத் திருத்திப் பொறிவா யில் ஐந்தவித் தான் அருளிய ஒழுக்க நெறியில் ஒழுகும் வண்ணம் திருநாவுக்கரசரால் அருளிச் செய்யப்பெற்றது, திரு அங்கமாலே என்னும் இத்திருப்பதிகமாகும். கடவுள் வழிபாட்டில் ஈடுபடுதற்கேற்ற தகுதி பெற்றமையால் திருத்தகவினவாக விளங்கும் தலே, கண் முதலிய அங்கங்களின் சிறப்பியல்பினே முடிமுதல் அடிவரை வரிசையாக விரித்துரைத்தல் பற்றி இப்பதிகம் திரு அங்கமாலேயென்னும் பெயர்த்தாயிற்று. அங்கா - உறுப்பு, மாலே - இயல்பு, வரிசை.

காந்தார பஞ்சமம்

இத் திருமுறையில் 10, 11 என்னும் எண்ணுள்ள

பதிகங்கள் காந்தார பஞ்சமம் என்ற பண்ணில் அமைந்தன.