பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

608

பன்னிரு திருமுறை வரலாறு


மேகராகக் குறிஞ்சியின் உருவமெனக் கொள்ளலாம் என்பர் யாழ் நூலார். இப்ப ன் ண ைமந்த பதிகங்களே நீலாம்பரி ராகத்திற் பாடுதல் பிற்கால வழக்கமாகும்.

45. கொல்லிக்கெள வானம்

குறிஞ்சிப் பெரும்பண்ணில் படுமலே என்னுந் திறத்தின் அக நிலையாய்ப் பண் வரிசையில் 49-என்னும் எண் பெற்றது கெள வானம் என்ற பண் ணுகும். மூன் ருந் திரு முறையில் 43-ஆம் பதிக த் திற்கும் ஏழாந் திருமுறையில் 33 முதல் 46 வரையுள்ள பதிகங்களுக் கும் உரியதாகக் குறிக்கப்பெற்ற கொல்லிக்கெள வானம் என்ற பண், நூற்று மூன்று பண்களுள் ஒன்ருக மேலே குறித்த கெள வானம் என்ற பண்ணுகவே இருக்கலாம் என்பர் யாழ் நூலார். இப்பண்ணின் பழைய உருவம் நன்கு புலப்படவில்லே. இப்பண் னமைந்த பதிகங்களைப் பிற்காலத் தாருட் சிலர் சிந்து கன்னட என்ற இராகத் தி லும் பலர் நவரோசு ’ என்ற இராகத்திலும் பாடுதலே வழக்கமாகக் கொண் டுள்ளனர்.

54. பழந்தக்கராகம்

இது, குறிஞ்சிப் பெரும்பண்ணில் ம ரு ள் ’ என்னுந் திறத்தின் புற நிலேயாய்ப் பண் வரிசையில் 54-என்னும் எண் பெற்றது. இப்பண் முதல் திரு முறையில் 47 முதல் 62 வரையுள்ள பதிகங்களிலும், நான்காந்திருமுறையில் 12. 13-ஆம் பதிகங்களிலும் அமைந்துளது. இதன் பழை பவுருவம் இதுவெனத் திட்டமாகத் தெரிய வில்லே, பிற்காலத் தார் பழந்தக்க ராகப் பதி கங்களேச் சுத்த சாவேரி என்னும் இராகத் திற் பாடுதலே வழக்க மாகக் கொண்டனர்.