பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 681

யிஞலே நின்திருவடியைப் பெற வேண்டுமென்று நினைந்து வந்தேன் ' என அவ்இறைவனை நோக்கி நினது வேட்கையினைத் தெரிவிப்பாயாக. 8 அங்ங்னம் தெரிவித்தற்கு முன்னரே முருகனைச் சேவித்து நிற்போராகிய மெய்யடியார்கள், அங்கே பொலிவுடன் வந்து தோன்றி அவ்விறைவனை நோக்கிப் பெருமானே, அறிவு முதிர்ந்த வாய்மையுடைய இப்புலவன் நினது பொருள் சேர் புகழுரையினைக் கூற விரும்பிக் கேட்டோர்க்கு இனியனவும் உறுதி பயப்பனவுமாக மிக்க பலவற்றை வாழ்த்தி வந்துள்ளான். இவன் நின்னுல் அளிக்கத் தக்கவன் ' என நின் பொருட்டுக் குறையிரந்து நிற்பர். அந் நிலையில் இழுமென இழிதரும் அருவி நீரையும் பழம் முதிர்ந்த சோலைகளேயும் உடைய மலைக்கு உரியவனுகிய முருகப்பெருமான், தெய்வத்தன்மை யமைந்த பேராற்றல் விளங்கும் வடிவினையும் வானளவோங்கிய வளர்ச்சியையு முடையணுக அவ்விடத்தே வந்து தோன்றித் தனது பேருருவம் மக்கள் கண்களாற் காண்டற்கரியதாதலின் அப்பெரிய வடிவத்தை உள்ளடக்கிக் கொண்டு தனது பழைய வடிவாகிய இளமைக் கோலத்தினை நினக்குக் காட்டி, " நீ வீடுபெற நினைந்து வந்த வருகையை யான் முன்னரே யறிவேன். அது நினக்கு எய்து தற்கரிதென்று அஞ்சுதலைத் தவிர்க " என்று நின்பால் அன்புடைய நல்ல வார்த்தைகளைப் பலமுறையும் அருளிச் செய்து, கடல் சூழ்ந்த இவ்வுலகிலே நீ ஒருவனுமே பிறர்க்கு வீடளித் தற்கு உரிமையுடையையாய்க் கேடின்றித் தோன்றும்படி பிறராற் பெறுதற்கரிய சிறப்பாகிய வீடு பேற்றின்பத்தை நினக்குத் தந்தருளுவான் என்பது இத்திருமுருகாற்றுப் படையின் திரண்ட பொருளாகும்.

எல்லாப் பொருளினும் சிறந்ததாகிய வீடு பேற்றினை விழுமிய பெறலரும் பரிசில் என நக்கீரனுர் இத்திருமுரு காற்றுப் படையிற் சிறப்பித்துள்ளார். விழுமிய பரிசில், பெறலரும் பரிசில் என இயையும். வீடு பேற்றினுஞ் சிறந்தது பிறிதொன்றின்மையின் அதனை விழுமிய பரிசில் என்றும், அவ்வீடுபேறு தானும் இறைவனது திருவருளாற் கிடைக்கப் பெறுவதன்றி உயிர்கள் தாமே தமது முயற்சி யாற் பெறுதற்குரிய எளிமைத் தன்மைத்து அன்ருதலின்