பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Louisdańss. A umum-5ueñas; (2) 231. அவளும் நெஞ்சம் வெதும்பித் தலைவனோடு ஊடினாள். இதுதான் தவறாகுமோ? - சொற்பொருள் ஊழ் வகை முறைப்படி அது ஊழின் செயல் என்பதாகும். அப்பி அணிந்து. இடுக்கண் - துன்பம். கொடிய திறம்-தலைவன் பலருமறியச் செய்த அச்செயல். ஊடல் ஊடாளோ - ஊடல் கொள்ளாளோ? -- வாய் கழுவார் எனவாங்கு, - ஈப்பாய் அடுநறாக் கொண்டதிவ் யாறெனப் பார்ப்பார் ஒழிந்தார் படிவு: மைந்தர் மகளிர் மணவிரை தூவிற்றென்று Ꮾ0 அந்தணர் தோயலர் ஆறு, - வையைதே மேவ வழுவழுப்பு உற்றென ஐயர்வாய் பூசுறார் ஆறு: நீர் விளையாட்டிற்குக் களிப்போடு வந்த மக்கள் பலரும் மதுவை யுண்டு'களித்தனர். எஞ்சிய மதுவை அவர்கள் ஆற்று நீரில் ஊற்றினர். இவ்வாறு மதுக்கலந்து வரும் நீரிலே வண்டினம் மொய்த்தது. அதனால், ஈக்கள் மொய்க்கும் அடப்பெற்ற நறவினை இவ்வாறு கொண்டுள்ளது' எனக் கூறியவராக, அதன்பால் நீராட வந்த பார்ப்பார்கள் நீராடாதேயே தம் வீடு சென்றனர். - - மைந்தரும் மகளிரும் நீரில் மூழ்கித் திளைத்து விளையாடி இன்புற்றனர். அவர் உடலிற் பூசியிருந்த மணச்சாந்தும் பொடிவகையும் நீரிற் கலந்து பரவின.அதனைக் கண்ட அந்தணர். அந்நீரில் தாமும் தோயாராய் அகன்று போயினர். مم தேன் மிகுதியாகக் கலந்து வருதலால் நீர் வழுவழுப்பு அடைந்தது என்று கூறியவராக, ஐயர்களும் வாய் கழுவாதவ ராக அதனை நீங்கிச் சென்றனர். சொற்பொருள் : அடு நறா அடப்பெற்ற கள். படிவு - முழுகுதல். மைந்தர் - ஆடவர் மைந்து வலிமை. மணவிரை - மணப்ப்ொடி வகைகள். தேம் -தேன். இதனால், பார்ப்பார். அந்தணர், ஐயர் என்பார் தனித்தனி வகையினராதல் காண்க. பாடியும் ஆடியும் களிப்பர் - விரையுரை விரைதுறை கரையழி பிழியுர ஊர்தரும் புனல் 65 கரையொடு கடலிடை வரையொடு கடலரிடை நிரைநிரை - நீர் தரும் துரை நுரையுடன் மதகுதொ றிழிதரு புனல் கரை - - - புரளிய செலு மறி கடல்