பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


இப்படி இருபத்தைந்து இருபத்தைந்து காசுகளாக ஒரு நாளைக்குப் பத்து அல்லது பதினைந்து ரூபாய் வரை வரும்படி வருகிறது. கிழவன் குடும்பச் செலவுக்கு இது ஓரளவு போதுமான வரும்படியாய் இருக்கிறது. வாழ்க்கை அவனுக்கு நிம்மதியாகக் கழிகிறது.

ஆனால் அந்தச் சிட்டு வானவெளியில் உரிமையோடு பறந்து திரியும் வாழ்க்கையை இழந்து விட்டது. கூட்டுக்குள்ளிருந்து வெளியில் பார்க்கும்போது தன்னைப் போன்ற சிட்டுக்கள் களிப்போடு பறந்துதிரியும் காட்சியைக் காணுகிறது. தான் மட்டும் எவ்வித உரிமையும் இல்லாமல் அடிமையாய் அந்தக் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பது அதற்குப் பெரிய வேதனையாய் இருந்தது. கிழவன் போடும் நெல்மணிகளைத் தின்று விட்டு, அவன் கூப்பிடும் போது ஏதாவது அட்டையைக் கொத்தி எடுத்துக் கொடுப்பது அதன் வேலையாய் இருந்தது.

ஒவ்வொரு முறை இருபத்தைந்து காசு வாங்கும் போதும், அந்தக் கிழவன் கடவுளுக்கு நன்றி சொல்லுவான். சிட்டுக்குருவி