பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43


மழைத் தூறல் நின்றுவிட்டது.திருடனைத் துரத்தியவர்களில் சிலர் அங்கங்கே கால் ஓய்ந்து நின்று விட்டனர். ஐந்து பேர் மட்டும் எப்படியாவது பிடிப்பதென்ற உறுதியில் ஓடிக் கொண்டிருந்தனர்.


மழை நின்றதும் சிட்டுக் குருவிகள் பறந்தன. ஓடிக் கொண்டிருக்கும் திருடன் மீது பாய்ந்தன. அவன் முகத்தின் மீது பாய்ந்து பாய்ந்து கொத்தின. அவன் ஓட முடியாமல் தடுமாறினான். அப்போது பின்னால் விரட்டிக் கொண்டு வந்தவர்கள் நெருங்கி வந்து அவனைப் பிடித்து விட்டனர்.

திருடன் பிடிபட்டதைக் கண்டு மற்றவர்களும் ஓடி வந்தனர். கூட்டம் கூடிவிட்டது.