பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

பேசிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டன. அந்த நல்ல தேவதையின் நட்புக் கிடைத்தது பற்றி அவை மகிழ்ச்சியடைந்தன.

ஒரு நாள் இரண்டு சிட்டுக் குருவிகளும் கடற்கரையில் தீனி பொறுக்கித் தின்று கொண்டிருந்தன. தீடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. உடனே, கடற்கரையில் காற்று வாங்க வந்திருந்த அனைவரும் எழுந்து ஓடினார்.

சாலைக்கு வந்து பேருந்துகளில் ஏறக்காத்திருந்தனர். சிறிதுநேரத்தில் ஒரு பேருந்து வந்து நின்றது. மக்கள் முட்டி மோதிக்கொண்டு பேருந்தில் ஏற முயன்றனர்.

பேருந்தில் ஏறிக் கொண்டிருந்த ஒரு சிறுமியின் கழுத்தில் இருந்த சங்கிலியை கூட்டத்தில் கலந்திருந்த ஒரு திருடன் அறுத்துக் கொண்டு ஓடினான்.

‘ஐயோ, சங்கிலி சங்கிலி!’ என்று அந்தச் சிறுமி கதறினாள். உடனே பேருந்து நின்றது. பேருந்தில் படிக்கட்டில் நின்ற பலர் திருடனை விரட்டிக் கொண்டு ஓடினர். திருடன் மிகவேகமாக ஓடினான். யாராலும் பிடிக்க முடியாது போல் இருந்தது.