பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44


எல்லோரும் திருடனை உதைத்து அவன் அறுத்து வந்த தங்கச் சங்கிலியை அந்தச் சிறுமிக்குத் திருப்பிக் கொடுத்தனர்.

சிட்டுக் குருவிகள் மகிழ்ச்சியுடன் தங்கள். கூட்டுக்குத் திரும்பின.

‘இன்று நாம் அந்தச் சிறுமிக்கு உதவி செய்தோம். இது தெரிந்தால் கடல் தேவதை மிகுந்த மகிழ்ச்சியடைவாள்’ என்று அவை பேசிக் கொண்டன.

மறுநாள் வழக்கம் போல் அவை கடற்கரைக்குச் சென்றன. தீனி பொறுக்கித் தின்று கொண்டிருந்தன.

அப்போது அவற்றின் மீது ஒரு வலை வந்துவிழுந்தது. எதிர்பாராத இந்த ஆபத்தைக் கண்டு அவை திடுக்குற்றன. வலையை இழுத்துச் சுருக்கிக் கொண்டிருந்த மனிதனைத் திரும்பிப் பார்த்தன.

முதல் நாள் சங்கிலி திருடி அகப்பட்டு அடி வாங்கிய திருடன் தான் அவன்.

‘என்னைக் காட்டிக் கொடுத்தீர்களா? இன்று பாருங்கள். உங்களை என் பூனைக்கு