பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46



வலைக்குள் இருந்த மற்றொரு சிட்டுக் குருவி 'அம்மா...!' என்று கதறியது.

அவ்வளவு தான்! பூனையின் தலையில் ஓர் அடி விழுந்தது. அந்தத் திருடன் தலையில் ஓர் அடி விழுந்தது. அந்தத் திருடனும் பூனையும் மயங்கி விழுந்தார்கள்.

வலைக்குள் இருந்த சிட்டுக்குருவியை ஒரு பெண்ணின் அழகான கை வெளியில் எடுத்து விட்டது.

'அன்புக் குழந்தைகளே! நீங்கள் பறந்து செல்லுங்கள்' என்று அந்தச் சிட்டுக்குருவிகளை இரண்டு கைகள் தூக்கி வானை நோக்கி வீசின.

சிட்டுக் குருவிகள் பறந்து கொண்டே கீழே நோக்கின. கடல் தேவதை கனிவான முகத்தோடு அவற்றைப் பார்த்துக் கை வீசிக் கொண்டிருந்தாள்.

'அம்மா காப்பாற்றினாள்; கடலம்மா காப்பாற்றினாள்’ என்று பாடிக் கொண்டே அவைதங்கள் அரசமரத்துக் கூட்டுக்குப் பறந்து சென்றன.