பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51



இனிமேல் எல்லாரிடமும்அன்பாக இருப்போம் என்று கூறினார்கள்.

கடலம்மா ஒவ்வொரு சிறுவனுக்கும் முத்தம் கொடுத்தாள்.

பறவைக்கூட்டங்களுக்கெல்லாம், என்றும் பசியில்லாத அளவு நிறைய தானிய மணிகள் கிடைக்குமாறு அருள் மொழி கூறினாள்.

அரசமரத்துச் சிட்டுக்களைத் தன் கையில் தூக்கி வைத்துக் கொண்டு அன்பு முத்தம் கொடுத்தாள்.

மீண்டும் ஒரு முறை எல்லாப் பறவைகளுக்கும் வாழ்த்துக் கூறிவிட்டுக் கடலம்மா மறைந்து விட்டாள்.

பறவைக் குலங்கள் எல்லாம் கடலம்மாவின் அருளை வியந்து மகிழ்ந்தன.

அரசமரத்துச் சிட்டுக்குருவிகள், கடலம்மாவின் செல்லச் சிட்டுக்களாக இருந்ததால், எல்லாப் பறவைகளும் அவற்றிடம் மிகுந்த அன்பு பாராட்டின.