பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

சிட்டுக்குருவி உட்கார்ந்திருந்தது. அதன் சிறிய கண்களின் கூரிய பார்வையால், அது உலகத்தையே அடக்கியாளக் கூடிய தோற்றத்தைப் பெற்றிருந்தது. இலட்சக் கணக்கான சிட்டுக்குருவிகளுக்குத் தலைவனாய் இருக்ககூடிய அதன் தகுதிக்கு அந்தப் பார்வையே சான்றாக அமைந்திருந்தது.

சிட்டரசனாகிய அந்தச் சிட்டுக் குருவி ஏறி வந்த பூம்பல்லக்கு உப்பரிகையின் மீது வந்து இறங்கியது. அது இறங்கிக் கொண்டிருந்த போதே, சுற்றிலும் இருந்த சிட்டுக்குருவிகள் “சிட்டரசன் வாழ்க! சிட்டரசன் வாழ்க” என்று முழக்கம் எழுப்பின.

பூம்பல்லக்கு உப்பரிகைத் தளத்தின் மீது இறங்கியவுடன், சிட்டரசன் மெல்லக் கீழே இறங்கியது. பாராண்டபுர அரசன் எதிரில் வந்து நின்றது.

‘மன்னர் பிரானே, வணக்கம்’ என்று தலை வணங்கியது.

ஒரு சிட்டுக் குருவிக்கு எவ்வளவு பெருமை என்று மனத்துக்குள் அதைத்