பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கருமுட்டை தானம் குழந்தை கொடுக்கும்

ம் நாட்டின் மக்கள் தொகை, நூறு கோடியை எட்டும் நிலையில், ஒரு குழந்தை கூட இல்லையே என ஏங்கும் தம்பதியரும் இலட்சக்கணக்கில் உள்ளனர். குழந்தைக்காக முயற்சிக்கும் 4 கோடிப் பேரில், 40 லட்சம் பேருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை. குழந்தைப் பேற்றை அடையாத தாய்மார்கள், பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்லத் தயங்கும் நிலை உள்ளது.

ஆண் மலட்டுத் தன்மை : தற்போது ஆண்களில் மலட்டுத் தன்மை மிக அதிகமாகக் காணப்படுகிறது. அணுக்கள் குறைவு. வீரியக் குறைவு, வீரியமின்மை போன்றவை, அதிகமாகக் காணப்படுகிறது. இவற்றை எளிய சிசிச்சை முறையில் சரிசெய்வது கடினம்.

இக்ஸி முறை : இயற்கையான கருத்தரிப்பு மற்றும் சோதனைக் குழாய்க் குழந்தை போன்றவற்றுக்கு, 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை உயிரணுக்கள் தேவைப்படும். ஆனால் இக்ஸி (Intra Cytoplasmic Spem Injection) முறையில் ஒரேயொரு நுண் உயிரணுவை, மிக நுண்ணிய ஊசியில் எடுத்து, கம்ப்யூட்டர் உதவியுடன் ஒரு கருமுட்டையின் சைட்டோபிளாஸம் பகுதியில் செலுத்தி, கருத்தரிக்கச் செய்யப்படும்.