பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் யுற்று மனம் வெந்து" ".............. நீதிகள் பலவும், தந்திரம் பலவும், சாத்திரம் பலவும், சொல்லி நான் கண்ணனைத் தொளைத்திடலானேன் தேவ நிலையிலே சேர்ந்திடாவிடினும், மானுடம் தவறி மடிவுறா வண்ணம் கண்ணனை நானும் காத்திட விரும்பி" என்று நாட்டிலுள்ள ஒவ்வொரு இளைஞனையும் தன் கண் முன்னால் நிறுத்தி பாரதி பாடுகிறார். தேவ நிலைக்கு உயர்த்தா விட்டாலும் மானுடம் தவறி மடிவுறா வண்ணம் நமது நாட்டு இளைஞனை உயர்த்த பாரதி பாடுகிறார். அதற்காக எத்தனையோ முயற்சிகள் செய்தும் நல்ல வார்த்தைகள் கூறியும், கெஞ்சிக் கேட்டும், அதட்டிக் கூறியும், தன் வழிக்குக் கொண்டு வர முயன்றும் முடியவில்லை. "கண்ணன் பித்தனாய்க் காட்டானாகி எவ்வகைத் தொழிலிலும் எண்ண மற்றவனாய் எவ்வகைப் பயனிலும் கருத்திழந்தவனாய் குரங்காய், கரடியாய், கொம்புடைய பிசாசாய், யாதோ பொருளாய் எங்கோ நின்றான்" என்று மிகவும் வருத்தமடைந்து, "எவ்வாறேனும் இவனையோர் தொழிலில், ஓரிடந்தன்னில் ஒருவழி வலிய நிறு த்துவோமாயின நேருற்றிடுவான்' என்று எண்ணிக் காத்திருந்தேன். ஒரு நாள் கண்ணனைத் தனியே வீட்டிற்கழைத்து வந்து, "மகனே என்பால் வரம்பிலா நேசமும் அன்பு நீ உடையை அதனை யான் நம்பி நின்னிடம் ஒன்று கேட்பேன், நீயது செய்திடல் வேண்டும் சேர்க்கையின் படியே மாந்தர் தம் செயலெலாம் வகுப்புறல் கண்டாய்" "சரித்திர நாட்டமும், தருக்கமும் கவிதையில் மெய்ப்பொருள் ஆய்வதில் மிஞ்சிய விளையும், கொண்டோர் தமையே அருகினில் கொண்டு, பொருளினுக்கலையும் நேரம் போக மிஞ்சிய பொழுதெல்லாம் அவருடன் மேவி இருந்திடல் ஆகுமேல் எனக்கு நன்றுண்டாம்" என்று கூறித் தன்னுடன் இருக்கும்படி கண்ணனிடம் வற்புறுத்திக் கூற. அதற்குக் கண்ணனும் தனது ஒப்புதல் தெரிவித்து. "அங்ங்னே புரிவேன்.ஆயின் நின்னிடத்தே, தொழில் இலாது எங்ங்ணம் சோம்பரில் இருப்பது காரியம் ஒன்று காட்டுவையாயின் இருப்பேன்" என்றான். 'கண்ணனுடைய இயல்பையும் திறமையையும் கருதி." "என் செய்யுளையெல்லாம் நல்லதோர் பிரதியில் நாள்தோறும் எழுதிக் கொடுத்திடும் தொழிலினைக் கொள்ளுதி" என்றேன். நன்று எனக் கூறி ஒரு நாழிகை இருந்தான். பின்னர் சொல்கிறேன் என்றான். பல முறை சொல்லியும் கேட்கவில்லை எனக்கும் கோபம் மேலிட்டு "போபோ" என்றேன். "கண்ணனும் எழுந்து செல்குவானாயினன், விழி நீர் சோர்ந்திட நான், "மகனே போகுதி வாழ்க நீ நின்னைத் தேவர் காத்திடுக நின்றனைச் செம்மை செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன் தோற்று விட்டேனடா! சூழ்ச்சிகள் அழிந்தேன், மறுத்தினி வாராய் செல்லுதி வாழி நீ என்று துயர்நீக்கி அமைதியோடிரு ந்தேன்" எனப் பாடுகிறார் பாரதி. கண்ணன் சென்றனன். திரும்பி ஓர் கணத்தே வந்தான். நல்ல தோர் எழுதுகோல் கொணர்ந்தான். நான் காட்டிய பகுதியைக் கவினுற வரைந்து முடித்தான். "ஐயனே! நின் வழியனைத்தையும் கொள்வேன் தொழில் பல புரிவேன், துன்பம் இங்கென்றும் இனி நினக்கு என்னால் எய்திடாதெனப் பல