பக்கம்:பாரதித் தமிழ்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I08 பாரதி தமிழ்

கடந்து போய் இத்தேசத்தின் பெயர் கேட்டவுடனே அந்நியர்கள் முடி வணங்குமாறு செய்யும் நன்மைக்கு நம்மவர்களால் என்ன கைம்மாறு செய்ய முடியும்? இந்த மகான்கள்தாம் என்ன கைம்மாறை எதிர் பார்க்கிறார்கள்? யாதொரு பற்றுமில்லாமல், இரந்து உண்பவர்களாய் உலகத்தாரின் ஞான வழிக்கு ஏற் பட்டிருக்கும் மாயையாகிய குருட்டுத் தன்மையை நீக்கி, ஒளியளிக்க வேண்டுவதே கடமையாகக் கொண்டு நாள் கழித்து வரும் இப்பெரியார்களுக்கு உலகம் அளக்கத் தகாதவாறு கடமைப்பட்டிருக் கிறது. ஆத்மாவே உண்மையென்றும் அதனே மறைத்து நிற்கும் மற்றத் தோற்றங்களெல்லாம் வெறும் மயக்கமே என்றும் போதனை செய்யத் தலைப்பட்டிருக்கும் அபேதாநந்த ஸ்வாமிகள், அந்தப் பாரமார்த்திக நிலைமை அறியாமல் வியாவஹாரிக நிலையிலே உழலும் நம்மவர்களுக்குக்கூட மிகவும் பயன்படத்தக்க சில ஹிதோபதேசங்கள் தந்திருக் கின்றார். ஞாயிற்றுக்கிழமை மாலை டவுன்ஹால் வெளி மைதானத்திலே இவர் உபந்நியாசம் புரிந்த காலத்தில் நம்மவர்களின் பேடித் தன்மையையும் பயங்காளித் தன்மையையும் பற்றிப் பேசியது கொஞ்சமில்லை. “ஆண்மை இழந்து பள்ளத்தில் விழுந்து கிடக்சி lர்களே! :த்து நின்று உங்களது புருஷத் தன்மையை நிரூபித்துக் கொள்ளுங்கள்’ என்று இத்தேசத்தாரை நோக்கிக் கூறுவதில் விவே காநந்தர் எம்மட்டு ஆத்திரம் கொண்டிருந்தாரோ அம்மட்டு அபேதாநந்தரும் கொண்டிருப்பதைக் காண்கிருேம். தீர புத்திரர்களாகிய ஆரியர்கள் ஏதோ ஒருவிதமான மதி மயக்கத்தால் குழந்தை களைப் போலவும் பெண்களைப் போலவும் நடந்து கொள்வதைப் பார்த்தால் அனைத்தையும் துறந்த ஞானிக்குக்கூட ஒருவிதான பரிதாபம் ஜனிக்கு மல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/107&oldid=605352" இலிருந்து மீள்விக்கப்பட்டது