பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கிய பார்வை


“நலங்குப் பாட்டு, கும்மி முதலியவற்றிலேகூடச் சில இடங்களிலே முத்துப் போல வார்த்தைகள் அகப்படும். தொழிற்பெண்களின் பாட்டு மிகவும் ரசமானது; சந்தமும் இன்பம். ஒன்றுக்குப் பாதி நல்ல கவிதை.”
-என்றெழுதினார். இதுகொண்டு

நாட்டுப் பாடல்களாம் எளிய பாடல்களையும் அவர் இலக்கிய நோக்கில் கண்டதை உணரலாம். அவற்றிலும் சொற்களைச் சுவைத்து “முத்தான” சொற்கள் என்றார். கவிதைப் பாங்கையும் கண்டார்.

இலக்கிய மேற்கோள்

பாரதியார் வாழ்ந்த காலத்தில் அச்சில் வந்த தமிழ் இலக்கிய நூல்கள் சிலவாகத்தான் இருந்தன. நாட்டுப் பாடல்களின் வகைகளில் சில பிள்ளைத் தமிழ் நூலின் உறுப்புகளாக அமைந்ததை எடுத்துக்காட்டி எழுதுபவர்

“பழைய காலத்து வகைகளை நாம் வித்தாரமாகக் கவனிப்பதற்கு வேண்டிய செளகரியங்கள் இலை. ஆதலால், பெயர் மாத்திரமே குறிப்பிட்டிருக்கிறோம்”
-என்றெழுதினார். இங்கு

“செளகரியங்கள்” என்று அவர் குறிப்பிடுவது நூல்கள் கிடைக்காத நிலையையாகும். “செந்தமிழ்” இதழில் பெரும்புலவர் மு. இராகவ ஐயங்கார் வெளியிட்ட காட்டுரையில் புறநானூற்றுப் பாடற் கருத்துகளைத் தந்திருந்தார். அவற்றைப் புதுமையாக உணர்ந்த பாரதியார் அவருக்குப் பாராட்டு ஒன்றை அனுப்பினார். திரு மு. இரா. அவர்களது கட்டுரையைத் தமது “இந்தியா” இதழில் வெளியிட்டார். இதுபற்றியதும் ஆர்வமும் உணர்வும் பொதிந்த கருத்தைப் பின்வருமாறு எழுதினார்:

55