பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. பிராமணன் யார்? IBO

எல்லோரும் பின் செயல்கள் செய்கிறார்கள். ஆதலால் செய்கை பற்றி ஒருவன் பிராமணனாய் விட மாட்டான். பின் தர்மஞ் -செய்வோனைப் பிராமணனாகக் கொள்வோமென்றால் கூடித்திரியன் முதலிய நான்கு வர்ணத்தவரும் தர்மஞ் செய்கிறார்கள். ஆதலால் ஒருவன் தருமச் செய்கையைப் பற்றியே பிராமணன் ஆகி விட மாட்டான். அப்படியானால் யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும் பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போல கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும் அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை, நேருக்கு நேராகத் தெரிந்த காமம் ராகம் முதலிய குற்றங்களில்லாத -வனாய் பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கினவனாய், இடம்பம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கிறானோ, இங்ங்னம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி ஸ்மிருதி புராண இதிகாசமென்பவற்றின் அபிப்ராயமாகும். மற்றபடி ஒருவனுக்கு பிராமணத்வம் ஸித்தியாகாது என்பது உபநிஷத்து.

பிராமணனாக வேண்டுவோர் மேற் கூறப்பட்ட நிலைமையைப் பெற முயற்சி செய்யக்கடவர். கூடித்திரியர், வைசியர், சூத்திரர் முதலிய மற்ற லெளகீக வர்ணங்களுக்கும் இது போலவே தக்கவாறு லகூடிணங்கள் அமைத்துக் கொள்க. அவ்விலக்கணங்கள் பொருந்தியவர்களே அவ்வருணத்தினரென்று மதிக்கத் தக்கவர்கள். அந்த இலக்கணங்கள் இல்லாதவர்கள் அவற்றையடைய முயற்சி செய்ய வேண்டும். போலிஸ் வேவுத்தொழில் செய்பவன் பிராமணன் ஆக மாட்டான். குமாஸ்தா வேலை செய்பவன் கூடித்திரியன் ஆக மாட்டான். சோம்பேறியாக முன்னோர் வைத்து விட்டுப் போன பொருளையழித்துத் தின்பவன் வைசியன் ஆகமாட்டான். கைத் தொழில்களையெல்லாம் இரக்கக்கொடுத்து விட்டுச் சோற்றுக்குக் கஷ்டமடைவோர் சூத்திரர் ஆக மாட்டார்கள். இவர்கள் எல்லாம்