பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக்கருத்துக்கள்-ஆ-சீனிவாசன்ட

துறையின் சிறந்த நூலுக்கு உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெற்றிருக்கிறது.

அத்துடன் திரு. அ. சீனிவாசன் எழுதிய சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்-ஒரு ஆய்வு என்னும் நூலை பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனமான பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டிருக்கிறது.

மேலும் திரு. அ.சீனிவாசன் எழுதி முடித்து அச்சில் உள்ள, ஆழ்வார்களும், பாரதியும், பாரதியின் தேசீயம், கம்பன் ஒரு சமுதாயப் பார்வை, கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும், கம்பன் காவியத்தில் விதியின் பிழையும் அறத்தின் வெற்றியும் என்னும் நூல்கள் விரைவில் வெளிவரவுள்ளன.

மேலும் பாரதி, கம்பன் தொடர்பாக வேறு சில நூல்களும், கிராமங்களை நோக்கி, இந்தியப் பொருளாதார சிந்தனைகள், பாரதியும் பகவத் கீதையும் முதலிய நூல்களும் எழுதிக் கொண்டு வருகிறார். பாரதி தொடர்பாக பல நூல்களை எழுதியும் பாரதி புகழ் பரப்புவதில் பங்கு கொண்டும் வருவதால் திரு. அ. சீனிவாசன் பாரதிய ஜனதா கட்சி வட்டாரத்தில் பாரதி சீனிவாசன் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

38 38 38