பக்கம்:பிராயச்சித்தம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 லா. ச. ராமாமிருதம் உடனேயே உயிர்த்தது. ஆச்சர்யங்கள் இன்னும் ஓயவில்லை. உயிர்த்துக் கொண்டே மேலும் மாறுதல்கள் கண்டு மனம் உணரும் தரிசன பயத்துக்கு நேரம் இல்லை. சர்வாபரண பூஷிதை யாக நெற்றிச் சரத்தின் பதக்கம் நடு வகிடில் pவலிக்க காலைத் துக்கி நின்றாடும் தெய்வமே என்னைக் கை தாக்கியாள் தெய்வமே மேடையோரத்திலிருந்து வாத்தியங்களினூடே பாட்டுக் கிளம்பிற்று. 'மது! மது!!' தர்மராஜன் தூக்கத்தில் அலறினார். 'தா தரிகிட தரிகிட தக தளாங்கு தகதா திமிதா - நாதிர்தானி நாதிர்தானி நாதிர்தானி கனவு கலையாமல் தர்மராஜன் தலையை உதறிக் கொண்டு அம்பு பாய்ந்த விலங்கு போல் படுக்கையில் புரண்டு புரண்டு துடித்தார். மஹா தாண்டவ மஹர் ப்ரளய சாகழி தர்மராஜன் காலடியில் பூமி மிதந்தது. கோமதி அருகே கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள். அவரை எழுப்ப பயமாயிருந்தது. மது மது!! படிப்படியாக முனகலாய் ஒய்ந்து அதுவும் ஒய்ந்தது. அவர் கண்கள் நனைந்திருந்தன. 岑 岑 岑 மதுவின் தனிசாமர்த்தியமா, தற்செயலா? ஒப்பனை யில் சவுரி சேர்த்துப் பின்னி, முழங்கால் வரை தொங்கிய