பக்கம்:பிராயச்சித்தம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 லா. ச. ராமாமிருதம் "அப்போ, நீ இதை உன் அரண்மனை என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.’’ கையைக் கொட்டிக் கொண்டு சிரித்தாள். 'நல்ல ஐடியா. இதுவரை எனக்குக் தோனல்வியே. அடுத்த தடவை யாரேனும் வந்தால் ஞாபகம் வச்சுக்கணும். உட்காருங்கோ.’’ பாயை விரித்துப் போட்டு, ஒரு தலையணையையும் தட்டிப் போட்டாள். 'சுவத்தோரமா செளகரியமா சாஞ்சுக்கோங்கோ.' மேம்பாலத்து வீட்டைவிட இது சின்னது. ஆனால் வாடகை பெரிசு இதுக்கே இப்போ இடம் கிடைக்கல்லே. நீங்க முந்தி வந்தப்போ லோபா லெட் பார்த்திருப்பேள். அடிச்ச புயல்லே அம்மி குழவிக்குப் பதிலா அது பறந்து டுத்து. முழிக்காதேங்கோ லார், பாகை: லார் பாகைr:’’ புன்னகை புரிந்தார். 'இப்போ :ாங்கிப் போட்டிருக்கலாம். ஆனால் எனக்கு interest இல்லை. ஆனால இப்ப நீங்க வந்து ட்டேன். வாழ்க்கையைத் திரும்ப ப் ள | ன் பண்ணனும். அவள் குரலில் உற்சாகம் தெரிந்தது. என்ன பேத்தநாள்? 'ஸார் ஒண்னு உங்களிடம் சொல்ல விரும்பறேன். இப்போ நான் யாருக்கும் பொறுப்பில்லை. யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஸார், ஒரு நிமிஷம் Change பண்ணிண்டு வந்துடறேன்.' பெண்களுமே அடிப்படையில் லேசா கேள்தான். சந்தோஷத்தில், அதிகப்படி இருக்கிறாள். பாவம் இருந்துவிட்டுப் பையன் அவரைக் கவனிக்கவே இல்லை. பால்கோவாப் பார்சலை சுற்றியிருந்த மணிக் கயிறைப் பல்லால் கடித்து இழுத்து அறுக்க முயன்று கொண்டிருந்தான்.