பக்கம்:பிராயச்சித்தம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 லா. ச. ராமாமிருதம் நின்றிருந்தேனானால், மனுஷன் தன் பொறுப்பை உணர்ந் திருப்பானோ என்னவோ? நாங்களும் உருப்பட் டிருப்போமோ என்னவோ? இந்த நிலைக்கே நான்தான் காரணமோ என்னவோன்னுகூட சில சமயம் தோணறது Gö打序。”” பதில் இல்லை. "லார், ஆனால் ஒரு சிறகு ஒடிஞ்சுபோய் ஒத்தைச் சிறகில் எத்தனை நாள் பறந்துகொண்டிருக்க முடியும்?' குத்துவிளக்கில் சுடர் அவிந்து பொசுங்கல் நெடி பரவிற்று. 'பதில் அங்கிருந்தே வந்துடுத்து, பார்த்தேளா? என்ன ஸார், எனக்காகக் கண்ணிர் வி.றேளா? அப்போ எனக்கு நம்பிக்கையிருக்கா? வாழ்க்கை வரளாமல் இருப்பதற்குக் கண்ணிர் அத்தாட்சியாமே! அப்புறம் ஒரு சின்ன சமாச்சாரத்தில்தான் விஷயம் முத்தாய்ப்பு வெச்சது. மத்தவாளுக்கு எப்படியிருக்கோ தெரியாது லார், குழந்தையின் உண்டியிலிருந்து திருடிட் டார் ஸ்ார்...” அவளுக்கு மூச்சு இறைத்தது. அது வரைக்கும் பொறுத்துண்ட மனசுக்கு இதைத் தாங்க முடியல்லே ஸார்! "சாயந்திரம். இல்லை, இரவு எட்டு மணிக்கு மனுஷன் எங்கிருந்தோ வீட்டுக்கு வந்ததும் அவருடைய Bond Box தயாரா அவருடைய துணிமணியோடு வெச் சிருந்ததை, அவர் உள்ளே நுழையுமுன்னாலேயே கையில் கொடுத்தேன். விழுந்து நமஸ்காரம் பண்ணினேன். 'உள்ளே இருநூத்தி அம்பது ரூபாய் பணமும் வெச்சி ருக்கேன், போயிடுங்கோ. இல்லை, இந்த வேளையில் குழந்தையோடு நான் இடம் தேடணுமா சொல்லுங்கோ. ஆனால் நம்முடைய பொம்மை விளையாட்டு, இன்னி யோடு, இந்த நிமிஷத்தோடு முடிஞ்சுது."