பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கனவு

இரவுகளை நான் பெரிதும் விரும்புகிறேன். அவை நிம்மதியாகத் துரங்குவதற்குத் துணைபுரிவதால்.

தூக்கத்தை நான் மிகுதியும் நேசிக்கிறேன். அது கனவுகள் நிகழ அரங்கம் அமைத்துத் தருவதால்.

கனவுகளை நான் காதலிக்கிறேன். அற்புதமான, இனிமை நிறைந்த, கிளர்ச்சி ஊட்டும், அனுபவங்களுக்கு அவை ஆதாரமாக இருப்பதனால்.

இரவு நேரங்களை நான் எவ்வளவு ஆர்வத்தோடு வரவேற்கிறேன் என்பது எவருக்கும் தெரியாது. தெரிந்தாலும், ஏன் அப்படி வரவேற்கிறேன் என்பது அவர்களுக்குப் புரியாது. -

புதிய பிரதேசங்களுக்குப் பிரயாணம்போகச் சித்தமாகிற சிறுவனுக்கு உண்டாகிற பரபரப்பும், உளக்கிளர்ச்சியும், எதிர்பார்த்தலும், அவாவும் எனக்கு எழுகின்றன. ஒவ்வொரு இரவிலும் தூங்கப் போவதற்கு முன்னால், -

தாக்கம் அது இனியது. அது நன்று; அது வாழ்க’ என்று என் மனம் இசைக்கிறது. தூக்கம் உடலுக்கு ஒய்வு