பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 புண்ணியம் ஆம் பாவம்போம்:

அறையினுள் பதுக்கினான். வேக வேலைதான். ஆயினும், தலைமை ஆசிரியரின் பார்வை வீச்சில் அது பட்டு விட்டது. வேகமாக வகுப்பினுள் புகுந்தார் அவர். அவசரமாக அந்த வரிசையை அணுகி, டெஸ்கைத் திறந்தார்.

அவருடைய கைத்தூண்டிலில் அந்தப் புத்தகம் சிக்கி வெளியே வந்தது.

பார்த்தார். செக்ஸ் கதைகள். உரிய படங்களுடன், அந்தப் புத்தகத்தால் பையனின் மூஞ்சியில் அறைந்தார் தலைமை ஆசிரியர். .

பக்கத்தில் நின்ற சின்னப் பையனுக்குத் தான் அடி விழுந்தது.

என்னிது இல்லை ஸார். அவன் புக்தான் அவன்தான் என்று பையன் முனு முணுத்தான்.

பெரிய பையனையும் அவன் சகாக்களையும் கோபமாக முறைத்தார் பெரிய ஆசிரியர்.

‘கிளாஸ் முடிந்ததும் மூன்று பேரும் என் ரூமுக்கு வாங்க என்று உத்திரவிட்டார். புத்தகத்துடன் வெளியே நடந்தார். . -

போகிற போதே, வகுப்பு ஆசிரியரைப் பார்த்து, ‘கிளாலை நன்றாக கவனிச்சு, டிஸிப்ளினை நிலை நிறுத் தனும். படிக்கிற பையன்கள் ஒழுங்காக இல்லையென்றால், ஸ்கூலின் பெயர் என்ன ஆகும்?’ என்று கூறி நடந்தார்.

வகுப்பு நேரம் முடிந்ததும், தவறு செய்து பிடிபட்ட மூன்று மாணவர்களும் தலைமை ஆசிரியர் அறையை நோக்கி நடந்தார்கள். பதைபதைக்கும் நெஞ்சோடு. பயம் மண்டும் தினைப்புகளோடு. .