பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$... or

வல்லிக்கண்ணன் 45

கடுவன் பூனை என்ன தண்டனை கொடுக்குமோ என்ற அச்சம் அவர்களை தயங்கித் தயங்கி நடக்க வைத்தது. பூனை மாதிரி மெதுவாக நடந்தார்கள். மிரளமிரள விழித்துக் கொண்டு போனார்கள். நேரே அறைக்குள் நுழையாமல், அஞ்சி ஒதுங்கி நின்று உள்ளே பார்த்தபடி நேரம் போக்கினார்கள்.

உள்ளே பெரிய ஆசிரியர் சுவாரஸ்யமாக ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். வெளியே பையன்கள் வந்து நின்றது கூட அவருக்குப் புலனாகவில்லை.

அப்படி அவர் படித்தது. தன்னுடைய செக்ஸ் கதைப் புத்தகம்தான் என்பதை பெரிய பையன் கவனித்துவிட்டான். அவனுக்கு சிரிப்பு வந்தது.

இதற்குள், வெளியே யிருந்து வந்த பியூன், ‘என்ன இங்கே நிற்கிறீங்க?’ என்று பையன்களைக் கேட்டது தலைமை ஆசிரியர் காதுகளையும் தொட்டது.

அவர் அவசரம் அவசரமாக அந்தப் புத்தகத்தை மேஜை மேல் வைத்தார். அதன் மேலே வேறொரு பெரிய நூலை வைத்தார். பையன்களை நோக்கி ‘உம்’ என்றார்.

மாணவர்கள் பயந்த பாவனை காட்டி தலைகுனிந்து நின்றார்கள்.

நீங்க செய்தது பெரிய தப்பு. இத மாதிரிப் புத்தகங்களை எல்லாம் நீங்கள் படிக்கக் கூடாது. அதிலும், வகுப்பிலே வைத்து, பாடம் நடக்கிறபோது, பாடத்தை கவனிக்காமல் ஆபாசப் புத்தகங்களைப் படிப்பதென்றால், உங்களுக்கு எவ்வளவு திமிரு இருக்கணும்? செச்சே, ஒழுக்கம் எவ்வளவு தூரம் கெட்டப் போயிருக்கு நான் இதை மன்னிக்க முடியாது. ஆளுக்கு அஞ்சு ரூபா ஃபைன். நாளைக்கே கட்டணும்.'