பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 4 யிலேயே சோஷலிஸத்தை நிச்சயமாக அடைய முடியுமென்று அவர் விளக்கியுள்ளார், அவர் கருத் து. கஃா, அவருடைய சொற்களிலேயே தொகுத்துக் கொடுக்க வேண்டு மென்ற ஆவலே என்னை இந்நூலை எழுதத் தூண்டியது. கிராமங்களில் பஞ்சாயத்துக்களும், கூட்டுறவு சங்கங்களும், பள்ளிகளும் நல்ல முறையில் இயங்கி வரவேண்டும்; பல கிராமங்கள் சேர்ந்து பஞ்சாயத்து யூனியன்கள், மாவட்டங்களில் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள், இராஜ்யங்களில் சட்டமன்றங்கள், டில்லியில் பாராளுமன்றம் என்ற முறையில் நம்நாடு வேரிலிருந்து உச்சிவரை உண்மையான ஜனநாயகம் அமைந்திருக்க வேண்டும் என்பது நேருவின் ஆசை. ஆளுல் எதிலும் ஆத்திரமும், அவசரமும் கொள்ளக் கூடாதென்றும், மக்களின் ஆதரவுடனேயே நாம் முன்னேற வேண்டு மென்றும், மக்களுக்கும் பயிற்சி யளித்துக் கொண்டே வரவேண்டு மென்றும், அவர் பல இடங்களில் வற்புறுத்தியுள்ளதையும் நாம் நினை வில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆறடி உயரமுள்ள கோடிக்கணக்கான மக்களி டையே மலை போன்ற வீரமேதை ஒருவர் இத்தனை காலம் வாழ்ந்து வழிகாட்டி வந்தார். அவருடைய கருத்துக்களின் களஞ்சியம் இந்நூல். இதற்கு உள்ளன்போடு முகவுரை வரைந்து உதவிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரவர்களுக்கும், இதனைச் சிறந்த முறையில் வெளியிட்டுள்ள வானதி பதிப் பகத்தாருக்கும் என் நன்றி உரித்தாகும். ப. ராமஸ்வாமி