பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O களை ஒன்றகச் சேர்த்துப் பயிர் செய்தால்தான் அதிகப் பயனடைய முடியும் என்று நான் கருதுகிறேன். அவைகள் வெவ்வேறு நபர்களுக்குச் சொந்தமா யிருக்கலாம். ஆனல் பயிர் செய்வதில் அவைகளைச் சேர்த்துச் செய்ய வேண்டும். இந்த வழியில்தான் சேதம் அதிகமில்லாமல் செய்ய முடியும். நூறு வகை யாக முன்னேற்றமும் அடைய முடியும். இதை நான் விவரிக்காமலே எளிதில் உணர்ந்து கொள்ளலாம். விவசாயத்தில் கூட்டுறவு முறையை நாம் மிகவும் விரிவாக்க வேண்டும். இப்பொழுது சுருக்கமான அளவில் இருந்து வருகிறது, மக்களின் சம்மதத்தின் பேரில், கூட்டுறவு விவசாயம், அல்லது சேர்ந்து செய் யும் விவசாயமே கடைசிப் படியாக இருக்கும். அரசாங்கப் பண்2ணக2ளயும் நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அவைகள் மாதிரிப் பண்ணைகளாக விளங் கும், அவைகளில் கூட்டாக விவசாயம் செய்வதன் ஆதாயங்களைக் காட்ட முடியும். அவைகளின் முலம் காமும் ஜனங்களும் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும்...... நமக்குள்ள ஒரே வழி கூட்டுறவு இயக்கம்தான். கூட்டுறவின் மூலமாகவே, தனி நபர் தன் திறமையை யும் பண்பையும் இழக்காமலும், தன் சுதந்தரத்தைக் காத்துக்கொள்ளவும், அதே சமயத்தில் பெரிய அள வில் தொழில் செய்யவும், விஞ்ஞானத்தையும் பொறி இயல் அறிவையும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். -டிெ டிெ H H o