பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பண்ணையில் 10% பங்கு இருக்கிறது. ஆனால், அவன் அதில், இந்தப் பகுதி நிலம் என்னுடையது' என்று சொல்ல முடியாது. மொத்த நிலத்தில் அவனுக்கு 10% உடைமை உண்டு, இங்கே உடைமை என்பது தெளிவான உருவமாய்த் தெரிகிறது. இலாபத்தில் அவனுக்குரிய பங்கையும் அவன் பெறுகிறன். இந்தக் காலத்தில் தொழில்களில் பின் தங்கிய நாடுகளிலேயே நிலம் மிக மிக முக்கியமாகக் கருதப்படுகின்றது. எங்குமே நிலத்திற்கு ஓரளவு முக்கியம் உண்டு. ஆனல், தொழில்களில் பின்னடைந்த சமுதாயங்களில், அதன் முக்கியத்துவம் அதிகமா யிருக்கிறது. ஆனல் எங் கெங்கு தொழில் முன்னேறுகின்றதோ, அங்கெல்லாம் உடைமை என்பது பங்குகளும் பங்கு ரசீதுகளுமாகவே மாறுகின்றது. (கடன்கள் அளித்துள்ளவர்க்கு உரிய) செல்வாக்கு அல்லது மதிப்பாக அது ஆகிவிடுகின் றது. இந்த மதிப்புடையவன் தொழில்களைத் தொடங் குவதற்குத் தேவையான எவ்வளவு தொகை வேண்டு மாலுைம் பெற முடியும். எனவே உடைமை பற்றிய கொள்கை முழுதுமே மாறி வருகின்றது. இருந்த போதிலும், நாம் ஒரு சதுர கஜ அளவுள்ள கிலத்தின் மீது அமர்ந்துகொண்டு, இந்தச் சதுர கஜம் என் னுடையது, இதை எவரும் எடுத்துக்கொள்ள முடி யாது என்று பெருமையடித்துக் கொண்டு, உடைமை யோடு ஒட்டிக்கொள்கிறேம். சமுதாய வாழ்க்கை விரி வடைந்து வளரும்பொழுது, அது போய்விடுகின்றது. பெரிய நகரங்களில் தனிப்பட்டவர் உடைமைகளாகச் சில சாலைகளும் பாலங்களும் முன் ல்ை இருந்தன. இப் பொழுது சாலைகளும், பாலங்களும் பொதுவான உடைமைகளாகி விட்டன. இரயில்வேக்கள் கூடப் பொதுச் சொத்துக்க ளாகிவிட்டன. த னி ந ப ர் உடைமை பற்றிய கருத்து மாறிவருகின்றது, அதனல் பொதுமக்களும் தனி நபரும் இலாபமடைகின்றனர்.