பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297 ஏன் என்றல், இந்த நீதிமன்றத்தை நீதியைப் பரிபாலிக்கும் ஒரு நீதித்தலமாக கான் ஏற்றுக் கொள்ளவில்லை. தலைமை தாங்கி கடத்தும் அதி காரிக்கு நான் அவமரியாதை செய்வதாத எண்ண வேண்டாம். அரசியல் குற்றங்கள் சம்பந்தப்பட்ட மட்டில், இந்தியாவிலுள்ள நீதி மன்றங்கள் அரசாங்க நிர்வாகிகளுடைய தீர்ப்புக்களையே நிறைவேற்றிப் பதிவு செய்கின்றன. இந்தியாவை அளவுக்கதிக மான நீண்ட காலம் முறையற்ற நிலையில் ஆட்சி செய்து வந்த ஒர் அரசாங்கத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதற்காகவே, அவைகள் இன்று முற் காலத்தைவிட அதிகமாகப் பயன்படுகின்றன. அந்த அரசுக்கு இருந்த மரியாதையும் திரும்ப வர முடியாத முறையில் போய் விட்டது. 'கிரிமினல் முறையில் நான் பயமுறுத்தியதாக வும், பணம் பறிப்பதில் ஒத்துழைத்ததாகவும் குற்றம் சாட்டப் பெற்று, நான் இங்கே கிற்கிறேன். எனனேக் கைது செய்த வாரண்டில் முன்பு பழக்கமான 124-ஏ பிரிவும் இருக்கிறது. ஆனால் இன்று நான் அதற்காக விசாரிக்கப் பெறவில்லை. நான் விரிவான முறையி லேயே வாக்கு முலம் கொடுக்க எண்ணி யிருக்கிறேன். கான் என்னைப் பல அறைகளாகப் பிரித்துக் கொள்ள இயலாது. மறியலுக்காக ஒரு பகுதி, இராஜங்கத் துவேஷத்திற்காக ஒரு பகுதி, தொண்டர் படையில் சேருவதற்காக ஒரு பகுதி என்று என்னைக் கூறுகளா கப் பிரித்துக் கொள்ள முடியாது. என் வேலைகளுக் கெல்லாம் ஒரே குறிக்கோள்தான் உண்டு. அந்தக் குறிக்கோளை அடைவதற்கு என்னுடைய வலிமை முழு வதையும், என் சக்தி முழுவதையும் உபயோகித்து வந்திருக்கிறேன். நீண்ட காலம் இங்கிலாந்தில் தங்கி, வழக்கமான முறையில் பள்ளியில் பயின்று, சர்வகலநதி