பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 105 இவ்வளவுதானா இந்த இன்பம்! என்று உணர்ந்து மறுபடியும் நான் என் மனசைத் திடப்படுத்திக்கொண்டு அதன் பிறகு ஒரே உறுதியாக நான் துறுவற தருமத்தை நடத்தினால், நான் எடுத்துக்கொண்ட காரியம் கெடாமல் முடிவுறும். நான் செய்துள்ள புண்ணிய கருமங்கள் அபாரமானவை. ஆகையால், இந்த அற்ப குற்றத்தினால், அது கெட்டுப் போகாது. என்னுடைய ஆயுசு காலத்தில், நான் இப்படி உன்னுடைய சிற்றின்ப சுகத்தை நாடும் காலம் அணுவிலும் பரம அணு வானதால், இதற்குத் தக்கபடி பிராயச்சித்தம் செய்துகொள்ள எனக்கு ஏராளமான அவகாசம் இருக்கிறது. ஆகையால், நீ எண்ணுகிறபடி இதனால் நான் நரகத்துக்குப் போவேன் என்று நான் நினைக்கவில்லை. இப்போது என் மனசைக் கவர்ந்து சஞ்சலப்படுத்தும் இந்த ஆசையை உன் உதவியால் நான் விலக்கிக் கொள்வேனாகில், இனி என்னுடையதுறவற தருமம் சரிவர நடைபெறும். நான் முன்னிலும் பன்மடங்கு அதிகக் கடுமையான நியம நிஷ்டைகளால் ஒரு நொடியில் இந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்வதோடு முடிவில் பேரின்ப சுகத்தை அடைவேன். எனக்கு அப்பேர்ப்பட்ட பேரின்பம் வாய்ப்பதற்கு நீ உதவியாக இருப்பதனால், உனக்கும் பெருத்த புண்ணியம் லயிக்கும். ஆகையால், நீ உன் பிடிவாத குணத்தை யும் நாணத்தையும் விலக்கி, என்னிடம் சந்தோஷமாக இரு. பொழுது விடிந்தவுடன் நான் உன்னை உன்னுடைய ஊரில் கொண்டு போய்ப்பத்திரமாகச் சேர்க்கும்படி மனிதரை அனுப்பி வைக்கிறேன். இன்றைய இரவில் நீ இவ்விடத்தில் இன்னது செய்கிறாயென்பது ஒருவருக்கும் தெரியப் போகிறதில்லை. இதை நான் என் உயிருள்ள வரையில் ரகசியமாக வைத்துக் கொள்ளுவதாக உனக்குப் பிரமாணம் செய்து கொடுக்கிறேன்” என்றார். - -

தனது சொற்களைக் கேட்டு அவர் தமது துர் எண்ணத்தை விலக்கிவிடுவாரென்று ஷண்முகவடிவு நினைத்ததற்கு மாறாக, அவர் தனக்கு நீதிபோதனை செய்ததையும், அவர் தன்மீது