பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 21 i அறையில் இருந்தேன். ஆகையால், எல்லா விவரமும் என் காதில் பட்டது. ஆகையால், உமது விஷயத்திலும் ஷண்முகவடிவின் விஷயத்திலும் இரக்கங் கொண்டு நான் ஆட்கள் மூலமாய் உம்மை விடுவித்துவர ஏற்பாடு செய்தேன். இனி ஷண்முகவடிவைத் தேடிப்பிடிக்க வேண்டியது உம்மைச் சேர்ந்த பொறுப்பு. அசட்டை வேண்டாம்.

நான் கடவுளைப் போல சர்வ வல்லமையும், சர்வக்ஞமும் வாய்ந்தவன். நீர் மறுபடி பூனாவுக்குப் போகவோ, அல்லது அவ்விடத்திற்கு ஆள் மூலமாகவாவது தபால் மூலமாகவாவது செய்தி அனுப்பிப் பட்டமகிஷியை எச்சரிக்கவோ முயன்றால், அது எப்படியும் எனக்கு உடனே தெரிந்துபோகும். நீர் செய்யும் முயற்சி எதுவும் பலிக்காமல் செய்துவிடக் கூடிய சக்தி எனக்கு உண்டு என்பதை நீர் நிச்சயமாக நம்பலாம். நீர் திரும்பி இனி பூனாவுக்குப் போகமுடியாமல் தடுக்கவும் எனக்கு வல்லமை யுண்டு. ஆகையால், நீர் அந்த விஷயத்தை அடியோடு விடுத்து, ஷண்முகவடிவைத் தேடுவதிலேயே உமது முழுக் கவனத்தை யும் செலுத்த வேண்டும்.

இவ்வளவுதூரம் நான் எழுதியிருப்பதிலிருந்து, நான் உம்முடைய விஷயத்தில் உண்மையான அபிமானம் உள்ளவன் என்பதையும், ஆனால், நான் இன்னான் என்பது வெளியாகாத படி மறைவிலிருந்து உமக்கு உதவி செய்ய விரும்பு கிறேன் என்பதையும் நீர் எளிதில் யூகித்துக்கொள்ளலாம்; ஆகையால், கோலாப்பூர் சிறைச்சாலையிலிருந்து உம்மை விடுவித்துக் கொண்டுவரும் மனிதருடைய பெயர்அடையாளம் முதலியவை உமக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், அவர்களை வற்புறுத்தி அவர்களிடத்திலிருந்து என்னைப் பற்றிய விவரம் எதையும் தெரிந்துகொள்ளநீர் விரும்பக்கூடாது. நீர் நாணயமும் யோக்கியதா பகrமும் பரிபூர்ணமாக நிறைந்த சுத்தமான மனிதர். ஆகையால், நீர் இந்த நிர்ணயத்தை மீறி நடக்க மாட்டீரென்று நான் உறுதியாக நம்புகிறேன்.