பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 21 எல்லாம் அவர் படித்தபோது அவருக்கு எவ்வித ஆச்சரியமும் உண்டாகவில்லை. ஏனென்றால், அந்தப் பாகத்தில் தங்களுக்கிருந்த நிலங்கள், மாளிகைகள், வீடுகள், நகைகள், பணம், இதர சொத்துக்கள் ஆகிய சகலமான பொருட்களும் விவரமாகக் குறிக்கப்பட்டிருந்தன. அவைகளில் கோவில் களுக்கும், தர்ம சத்திரங்களுக்கும், மற்ற உறவினர்களுக்கும் இவ்வளவு இவ்வளவு கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறித்திருந்தார். அதன்பிறகு அவர் எழுதியிருந்த ஒரு விஷயம் நீலமேகம்பிள்ளைக்கு முற்றிலும் புதுமையாகவும் வியப்பாக வும் இருந்தது. அந்த விஷயத்தை அவர் அதுவரையில் காதால் கேட்டதே இல்லை. ஆகையால், அவர் அடைந்த ஆச்சரியம் அளவில் அடங்காததாக இருந்தது. அந்த பாகத்தை அவர் பன்முறை திருப்பித் திருப்பிப் படித்தார். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது.

நான் சமீபகாலத்தில் இறந்துபோய் விடுவேன் என்று நினைக்கத் தகுந்தபடி அவ்வளவு அதிக விருத்தாப்பியம் அடையாமல் இப்போது மத்தியகாலப் புருஷனாக இருக்கையி லேயே நான் இந்த உயிலை எழுதுவதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. என்னுடைய ஜீவகாலத்தில் நிரம்பவும் ரகசியமான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அந்தச் சம்பவம் எனக்குப் பிறகு என்னுடைய குமாரனான நீலமேகனுக்குத் தெரிவது அத்யாவசியம். ஆதலாலும், எனக்கு ஏதேனும் எதிர்பாராத அபாயம் நேர்ந்து, அதனால் என் பிராணன் போய் விடுமானால் அந்த ரகசியம் வெளியிடப்படாமல் போகுமாதலாலும், அப்படிப் போவதனால் நம்மை நம்பி இருக்கும் சிலர் ஜீவனத்துக்கு வேண்டிய பொருளில்லாமல் அநியாயமாகத் துன்புற்று ஏழ்மை நிலைமையடைந்து தவிக்க நேருமாதலாலும் நான் முன்னெச்சரிக்கையாக இந்த உயிலை இப்போதே எழுதி வைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த ரகசியம் அடியில் வருமாறு- என்னுடைய தர்ம பத்தினியும் என்