பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பூர்ணசந்திரோதயம் - 5 சொன்ன வார்த்தைகளை எல்லாம் நீ இவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட்டாயா? அல்லது, அந்த வார்த்தைகளெல்லாம் என்னை ஏமாற்றுவதற்காகச் சொல்லப்பட்ட வஞ்சக வார்த்தைகளா? இனி நீ என்னோடு கூடவே இருந்துவிட சம்மதிப்பதாகவும், ஆனால் மனம் கூசுவதாலும் உடம் பு அலுத்துப் போயிருப்பதாலும், ஒருநாள் பொறுத்துக்கொள்ளும் படியும் நீ கேட்டுக்கொண்டதை மறந்து போனாயா? இன்று சாயுங்காலம் நான் வண்டி கொண்டுவந்தால், என்னோடு என்னுடைய ஊருக்கு வருவதாகவும், என் பிரியப்படி நடந்து கொள்வதாகவும் நீசொன்னவளல்லவா? அப்படிச்சொன்னவள் கிழவியை ஏமாற்றிவிட்டு வந்து விட்டாயே! அப்படிப்பட்ட மோசக்காரியான உன்னை நான் எப்படி நடத்தினாலும் அது பாவமாகுமா? நீ வாக்குக் கொடுத்தபடி உன்னை இன்றைய தினம் இரவுக்குள் நான் எப்படியும் என்னுடைய ஊருக்குக் கொண்டு போக வேண்டும். உன்னை என் ஆசைநாயகியாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும் உறுதி செய்துகொண்டு நான் வண்டியோடு வந்திருக்கிறேன். வண்டி இதோ பக்கத்து தெருவில் நிற்கிறது. வெகு நேரத்துக்கு முன்னாகவே நான் இங்கே வந்தேன். தெய்வச் செயலாக, இந்த மாடத்தின் வாசல் கதவும் தாளிடப்படாமல் இருந்தது. நான் உள்ளே வந்து ஒளிந்து உன் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்; நீயும் வந்தாய்; வந்தவள் உன் அழகை எல்லாம் நான் கண்ணாரக் கண்டு களிகொண்டு மதிமயங்கும்படியாகக் கண்ணாடிக்கு எதிரில் நின்றாய்; கண்கொள்ளாத அழகோடு கூடிய உன்னுடைய சுய வடிவத்தைக் கண்டே நான் சித்தப்பிரமை கொண்டு நிற்கையில், அந்த வடிவம் இரட்டித்துத் தெ ரிந்ததால், அந்தச் சுகத்தையும் இன்பத்தையும் நான் என்னவென்று சொல்லுவேன் எவருக்கும் கிடைக்காத இப்படிப்பட்ட பெருத்த பாக்கியத்தை எனக்கு அளித்த நீ இனி பின்வாங்குவதென்றால், அது நடக்கக்கூடிய விஷயமா? நான் இனி என்னுடைய உயிரை விட்டாலும் விடுவேனே அன்றி, உன்னை மாத்திரம் விட