இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
146
உண்மை தான். சீட்டாட்டம் நம் கையில் தான் இருக்கிறது. அதனை நம் மகிழ்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்வோம். அதனிடம் ஆட்பட்டு அடிமையாகிப் போய்விடக் கூடாது. அப்படிப்பட்ட சபலத்தையும் சலன மனத்தையும் உடையவர்கள் இதன் பக்கமே போய்விடக் கூடாது.
மகிழச்சிக்காகத் தொடங்கப்பட்ட இந்த ஆட்டம் மனித இனத்தின் மாட்சிக்காக மட்டுமே விளங்கட்டும். இதை மாறாகப் பயன்படுத்துவோர் வாழ்வும் தாறுமாறாகப் போய்விடுவது நமது சமுதாயத்தில் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது என்பதை உணர்ந்து, நாம் சீட்டாட்டத்தை செட்டாகப் பயன்படுத்தி, சீராக வாழ்வோம் என்று விளையாடி மகிழ்வோமாக.