இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாதியென்றும் சமயமென்றும் சொல்ல வேண்டாம்
சாத்திரத்தை ஒருநாளும் நம்ப வேண்டாம்
விதியென்றும் வினையென்றும் சொல்ல வேண்டாம்
வீணாகக் காலத்தைக் கழிக்க வேண்டாம்
நாளென்றும் கோளென்றும் சொல்ல வேண்டாம்
நல்வாய்ப்பை அதனாலே இழக்க வேண்டாம்
தமிழினத்தின் தன்மானம் காக்க வந்தோன்
தலைவனாம் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!