பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஹஜ்

பண வசதியும் பயணத்திற்கான உடல் வலிமையும் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் மக்காவுக்குச் சென்று, ஹஜ் கடமைகளை நிறை வேற்றுவது இஸ்லாம் விதித்துள்ள ஐந்தாவது கடமையாகும்.

இஸ்லாத்தில் இறைவழிபாடு

இஸ்லாம் தூய எண்ணங்களுக்கு நற்செயல்களுக்கு முதன்மை தருகிறது. இறைவனை அறிந்து அவனை நேசிக்க வேண்டும். இறைவனின் கட்டளைகளை வாழ்வில் எல்லாத் துறைகளிலும் செயல்படுத்த வேண்டும். நற் செயல்களைச் செய்யத் தூண்ட வேண்டும். தீய செயல்களையும் கொடுமைகளையும் அநீதியையும் தடுக்க வேண்டும். வேண்டிய அளவு தான தருமங்கள் செய்ய வேண்டும். நீதி செலுத்த வேண்டும். மனித குலத்திற்கு இயன்ற வரை சேவை செய்வதும் இறை வணக்கமே. இதையே திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

“உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல புண்ணியம்; ஆனால், அல்லாஹ்வின் மீதும் இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் வானவர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு) அல்லாஹ்வின் மீதுள்ள) நேசத்தின் காரணமாகத் தன் (நெஞ்சுவக்கும்) பொருள்களைச் சுற்றத்தாருக்கும் அநாதைகளுக்கும், வறியவருக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும் ஈதலும் தொழுகையை நிலை நாட்டுதலும், ஜகாத் கொடுத்து வருதலுமே புண்ணியமாகும். இன்னும் வாக்குறுதி அளித்தால் அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகின்றவர்கள், துன்பமும்