பக்கம்:பொன் விலங்கு.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி . 325

அதை ருசித்துச் சாப்பிடுவதற்கு நீங்கள் அருகில் இல்லையே என்று நான் வருந்திய வருத்தம் கொஞ்சநஞ்சமில்லை.

கண்ணாயிரம் தானே ஒரு வீட்டுக்கு விருந்துச் சாப்பாடு சாப்பிடப் போய்விட்டுத் திரும்பிவந்த பின்பு அந்த வீட்டுக் குரியவருக்கு நன்றி தெரிவித்து எழுதுகிற கடிதமானால் அதில் மேல்படி வாக்கியம். 'சென்ற வாரம் உங்கள் வீட்டு விருந்துச் சாப்பாட்டில் பரிமாறிய வெண்டைக்காய்ப் பொரியலைப்போல் இந்தப் பிறவியில் இதுவரை வேறெங்கும் நான் சாப்பிட நேர்ந்ததில்லை; இனியும் நேரப்போவதில்லை என்று மாறி அமைந்திருக்கும். யாரோடு பேசினாலும், யாருக்கு எழுதினாலும் அந்த விநாடி வரையிலும் அதற்கப்பாலும் அவர்களுக்காகவே தான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதைப்போல் ஒரு பிரமையை உண்டாக்கிவிடுவதில் கண்ணாயிரத்துக்குநிகர்கண்ணாயிரம்தான்." ...கடிதத்தின் இந்தப் பகுதியைப் படித்துக்கொண்டிருந்தபோது, 'கண்ணாயிரத்தைப் போன்றவர்கள் நாலைந்து பேரோ அல்லது கண்ணாயிரத்திடமுள்ள தன்மைகள் உள்ள நாலைந்து பேரோ இல்லாத ஊர் எங்குமே கிடையாது போலிருக்கிறதடா குமரப்பன்! மல்லிகைப் பந்தல் கல்லூரியிலும் அந்த மாதிரி மனிதர்கள் சிலரை நான் சந்தித்து வருந்திக் கொண்டிருக்கிறேன், என்று வாய்விட்டுக் கதற வேண்டும்போல் இருந்தது சத்தியமூர்த்திக்கு. வாழ்க்கையின் கண்ணெதிரே நடந்து போகிற நல்லவர் கெட்டவர்களை குமரப்பன் எவ்வளவு நன்றாகப் படித்து உணர்கிறான் என்றெண்ணி நண்பனை வியக்கவும் தோன்றியது அவனுக்கு நண்பனுடைய கடிதத்தை ஒரு முறைக்கு இருமுறையாகப் படித்தபின் மோகினியின் புகைப் படங்களை மறுபடியும் பார்த்தான் அவன். அந்தப் படங்களில் அபிநயக் கோலத்தோடு அவள் சிரித்துக் கொண்டிருக்கிற சிரிப்பையும். பார்த்தான். அந்தச் சிரிப்பில் தெரிந்த இலட்சுமீ கரத்தையும் தெரியாமல் மறைந்திருந்த சோகத்தையும் கூட அப்போது அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. .

தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற அந்த அழகுப் பல்வரிசை அவன் நினைவில் நிறைந்தது. அதே கடிதத்தில் குமரப்பன் மேலும் எழுதியிருந்தான்: 'கண்ணாயிரத்தைப் போல் எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டு மென்று நியாயத்தை மீறிய வேகத்துடன் ஓடி வருகிறவர்களுக்கு வாழ்க்கையின் எல்லா வழிகளும் தாராளமாகவும் எதிர்ப்பின்றியும் திறந்தே வைக்கப்பட்டிருக்கின்றன. மோகினியையும் உன்னையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/327&oldid=595493" இலிருந்து மீள்விக்கப்பட்டது