பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வீரர்கள் பலரோடு பேசியும் பழகியும் அந்த உணர்வு தம்மிடமும் பிரதிபலிக்க விளங்குபவர் இவர். இவருடைய இந்தக் கண்ணுேட்டம், பாரதியை மகாகவியாக மட்டுமல்லாமல், மகா தீர்க்க தரிசனம் பெற்ற சமுதாயப் புரட்சிக் கனலாகவும் நமக்கு அறிமுகப் படுத்துகின்றது. தமிழ்ச் சமுதாயம் ஆர்வத்துடன் வரவேற்று, பாரதியின் நினைவைப் போற்றி, அவருடைய எண்ணங் களைக் கவிக்கனவுகளாக மட்டும் போய்விடாமல், நனவுகளாக நிகழ்த்துவதற்கும் பாடுபடவேண்டும். அந்த வேண்டுகோளுடன் தமிழ் உலகிற்கு இந் நூலைப் பதித்து வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்ருேம். -பதிப்பகத்தார்