பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடந்து வருகிறது. ஒருதேசத்தில் பிறந்த மக்கள் அனைவருக்கும் அந்த தேசத்தின் இயற்கைச் செல்வம் முழுவதையும் பொதுவுடமையாக்கி விட வேண்டும் என்ற கொள்கைக்கு இங்கிலிஷில் ‘சோஷலிஸ்ட் கொள்கை யென்று பெயர். அதாவது கூட்டுறவுக் கொள்கை. இந்தக் கூட்டுறவு வாழ்வுக் கொள்கை (சோஷலிஸ்ட்) ஐரோப்பாவில் தோன்றிய போது இதை அங்கு முதலாளிகளும் மற்றபடி பொது ஜனங்களும் மிக ஆத்திரத்துடனும் ஆக்ரஹத்துடனும் எதிர்த்து வந்தார்கள். நாளடைவில் இக்கொள்கையின் நல்லியல்பு இந்தக் கண்டத்தாருக்கு மேன்மேலும் தெளிவு பட்டு வரலாயிற்று. எனவே இதன் மீது ஜனங்கள் கொண்டிருக்கும் விரோதம் குறைவுபட்டுக் கொண்டுவரவே இக்கொள்கை மேன்மேலும் பலமடிந்து வருகிறது. ஏற்கனவே ருஷ்யாவில் ரீமான் லெனின், ரீமான் மின்த்ரோத்ஸ்கி முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளை நிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொது உடமைகள் ஆகிவிட்டது. இக்கொள்கை ஜெர்மனியிலும் ஆஸ்திரேலியாவிலும் துருக்கியிலும் அளவற்ற வன்மை கொண்டுவருகிறது. ருஷ்யாவிலிருந்து இது ஆசியாவிலும் தாண்டிவிட்டது. வட ஆசியாவில் பிரம்மாண்டமான பகுதியாக நிற்கும் சைபீரியா தேசம் ருஷ்யாவின் ஆதிக்கத்தைச் சேர்ந்ததாகையால் அங்கும் இந்த முறைமை அனுஷ்டானத்திற்கு வ்ந்து விட்டது. அங்கிருந்து இக்கொள்கை மத்திய ஆசியாவிலும் பரவிவருகிறது. ஐரோப்பாவிலுள்ள பிரான்ஸ் இங்கிலாந்து முதலிய வல்லரசுகள் இந்த முறைமை தம் நாடுகளுக்குள்ளும் பிரவேசித்து வரக்கூடும் என்று பயந்து அதன் பரவுதலைத் தடுக்குமாறு பலவிதங்களில் பிரயத்தனங்கள் புரிந்து வருகிறார்கள்கள். o

ஆனால் இந்த முறைமை போர் கொலை பலாத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவிவருவது எனக்கு சம்மதமில்லை. எந்தக்காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து அப்படியிருக்க ஸ்மத்வம் ஸ்கோதரத்வம் என்ற தெய்வீக தருமங்களைக் கொண்டோர் அவற்றைக் குத்து வெட்டு பீரங்கி துப்பாக்கிகளினால் பரவச் செய்யும் படி முயற்சி செய்தல் மிகவும் பொருந்தாத செய்கை யென்று நான் நினைக்கிறேன். பலாத்கார்மாக முதலாளிகளின் உடமைகளையும் நிலஸ்வான்களின் பூமியையும் பிடுங்கித் தேசத்திற்குப் பொதுவாகச் செய்யவேண்டும் என்ற கொள்கை ருஷ்யாவில் வெற்றி பெற்றதற்குப்பல பூர்வ காரணங்கள் இருக்கின்றன. நெடுங்காலமாகவே ருஷ்யா தேசத்தில் ஆட்சிபுரிவோரின் நிகரற்ற கொடுங்கோன்மையாலும் அநீதங்களாலும் செல்வர்களின் குரூரத்தன்மையாலும் பல ராஜாங்கப் புரட்சிகள் நடந்து வந்திருக்கின்றபடியால் இந்த மாறுதல் அங்கு அமைப்பது ஸுலபமாயிற்று மற்ற ஐரோப்பிய தேசங்களில் முதலாளிகளும் செல்வர்களும் இன்னும்

205