பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15



தொடர்பு: I


ஜீவ சம்போதனை என்னும் ஜைன சமய நூலிலே சகஸச் சக்க/வர்த்தியின் கதை கூறுகிற பகுதியில், நவநிதிகளின் இயல்பு கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

இருநாற் கையுயர்ந் தீராறு நீண்டே
ஒருநஸன் கொன் பானகன்று ஓவாதே — பெருநீர்மை
பின்றா நவதிகள் பெய்யும் பெருமுகில் போல்
வென்றாழி வேந்தற்கோர் வித்து.

இருக்குமிடத்தில் அற்ப நிலத்திலே அடங்கிப் போமிடத்து எட்டு யோசனை உயரமும் பன்னிரண்டு யோசனை நிகளமும் ஒன்பது யோசனை அலமும் உலடயவாய் ஓவாதே கொளினும் நவநிதிகளின் பெயர் யாவையோ எனின்.

வண்டோகை மானோகை பிங்கலிகை யேபதுமை
விண்டோயுஞ் சங்கையே வேசங்கை — தண்டார் ? சீர்க் காளையே மாகாளை சவ்வாதனம் பெயர்கள்
ஆகுமாம் என்றுரைப்பார் ஆய்ந்து.

வண்டோகை என்றும் மானோகை என்றும் பிங்கலிகை என்றும், பதுமை என்றும் சங்கை என்றும் வேசங்கை என்றும், காளை என்றும் மகாகாளை என்றும் சவ்வாதம் என்றும் நவாதிகளின் பெயர் சொன்னவாறு, இவற்றின் செய்கை யாதோ எனின்;

சாலிமுத லாகிய தானியம் அனைத்தும்
ஏலமின் கோடெழில் திகழ மருந்து
தண்டுத லின்றி வண்டோகை கொடுக்கும்,
கத்தித் தோமரத் தண்டெழு காஞ்சில்
வித்தக வாள்வளை வீற்கணை பிறவும்
மிக்க வாயுதம் விரலங் கரக்கை
பக்கரை வினையன மானோகை கொடுக்கும்,
பெரியோர் சிறியோர் பேதையர் தமக்கும்
கரிபரி தேர்க்கும் கவினுடை மணிப்பூண்
சிங்குதல் இன்றி பிங்கலிகை கொடுக்கும்,
துகிலொடு நூலுங் கவரியஞ் சவரியம்
தகவதின் சயந் தான்பது மையே,
தண்ணிய காற்றும் சந்தனக் குழம்பும்
புண்ணிய நறுநீர்த் திவலையும் நிழலும்
என்றிவை முதலாச் சங்கை பயக்கும்,
தாளமுஞ் சங்கும் சகண்டையுந் திமிலையும்
காளமும் குழலும் கரடியுந் துடியும்
விணையும் யாழும் விளங்குசூ ளிகையும்