பக்கம்:மதன கல்யாணி-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#42 மதன கல்யாணி

வழியாக அவளிடம் சமர்ப்பித்து, உச்சி முதல் உள்ளங்கால் வரையில் வைர வைடூரியங்களால் அவளை அலங்கரித்து சாஷ்டாங்கமாக தெண்டனிட்டு எழுந்து நின்று பயபக்தியோடு ஹரஹரவென்று கன்னங்களில் அடித்துக் கொண்டு அவளிடம் பரமபக்தனாக ஒழுகி வந்தார். மற்ற நாடகர்கள் நடிகளுக்காகவும், நாடகக் காட்சியின் சாமான்கள் வைப்பதற்காகவும் புரசைப் பாக்கத்தில் அமர்த்தப்பட்டிருந்த ஜாகையில் அவர் இரவெல்லாம் பாதுகாப்பாக இருப்பார் பொழுது விடிந்த பிறகு ஆலந்துர் பங்களாவிற்கு வந்து விடுவார் வந்து தமது நீராட்டம், சாப்பாடு, துயில் முதலியவற்றை நடத்திக் கொண்டு பிற்பகலில் திரும்பவும் புரசைப்பாக்கம் போய்விடுவார். அதுவரையில் பாலாம்பாளிலும் மிஞ்சிய பதிவிரதா சிரோன்மணிகள் வேறே எவரும் இருக்க மாட்டார்கள் என்னும்படி அவள் நடந்து கொள்வாள்; கிழவரது தலை மறைந்த பிறகே, அம்மாள் பதிவிரதா வேஷத்தைக் கலைத்துவிட்டு தனது சுயரூபத்தோடு, சுயராஜ்ய பரிபாலனம் செய்யத்தொடங்குவாள். அதன் பிறகு அந்தச்சக்கரவர்த்தினியைக் காணும் பொருட்டு போலி ராஜாக்களான சிற்றரசர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கப்பனங்கள், பலவகைப்பட்ட காணிக்கைப் பொருள்கள் முதலிய சிறப்புகளோடு வந்து சேருவார்கள் கடிதப் போக்கு வரத்துகள் நடைபெறும்; மணிக்கணக்கில் அவள் ஒவ்வொரு வருக்கும் பேட்டி கொடுப்பாள். ஆனால், அவள் ஒருவரோடு பேசும் சங்கதியை மற்றொருவரிடம் சொல்லவே மாட்டாள். அவனவனும் தான் ஒருவனே அவளோடு நட்பாய் இருப்பவன் என்று உறுதியாக நம்பி, கடைசிவரையில் ஏமாறும்படி அவள் அவ்வளவு அபாரமான திறமையோடும், சாமர்த்தி யத்தோடும் தனது காரியங்களை நடத்தி வந்தாள். விஷயங்களை மறைப்பதிலும், சமயோசிதமாக மாற்றுவதிலும், கூட்டிக் குறைத்துப் பேசுவதிலும், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விஷயங்களைச் சம்பந்தப்படுத்திப் பேசுவதிலும், அவளது முளைக்கு இணை யானது இந்த உல்கத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும்: அப்படிப்பட்ட மகாஜால் மலையாள பகவதியின் வலையிலேயே நமது மைனர் போய் அகப்பட்டுக் கொண்டு, அவளது அற்புத

ரூபலாவண்ணியங்களைக் கண்டு மதிமயங்கி தான் நாடிவந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/160&oldid=649601" இலிருந்து மீள்விக்கப்பட்டது