166
மனத்தின் தோற்றம்
3. நல்ல வாய்ப்பு - வசதி தரும் பழக்க வழக்கத்தைக் காட்டிலும் சிறந்த பழக்கவழக்கம் இருக்க முடியாது.
4. நல்ல வாய்ப்பு - வசதி தராத பழக்கவழக்கத்தைக் காட்டிலும் வீண் செயல் வேறு இன்று.
5. தன்னால் செய்ய முடிந்த நல்ல செயலையோ - கொடையையோ மறைத்தலினும் கொடுமை வேறொன்றும் இல்லை. -
6. நல்லறிவும் நல்லுணர்ச்சியும் இல்லாத மரக்கட்டை யாய் வாழ்தலைவிட வேறு சாவு இல்லை. இந்த வாழ்வே சாவுக்குச் சமம்.
7. பேராசையைக் காட்டிலும் பெரிய வறுமைத்தனம் வேறு இருக்க முடியாது.
8. நமக்குப் பின் விட்டுப் போகக்கூடிய எச்சப்பொருள் புகழினும் வேறேதும் இன்று.
9. ஒருவரிடம் சென்று கெஞ்சிக் கேட்டு இரத்தலைக் காட்டிலும் இழிவு வேறு யாதும் இலது.
10. தம்மிடம் வந்து ஒன்று கேட்டு இரப்பவர்க்குக் கொடுப்பதைவிட உயர்ந்த சிறப்பு வேறு இருத்தற்கு இல்லை.
7. பொய்யான பத்து உரைகள்
1. கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழும் மக்களுக்குள், உயர்ந்த பெரிய அறிவாளர் இனிமையாய் வாழ்வதில்லை என்பது பொய்; அவர் உள்ளம் இனியதாகவே இருக்கும்.
2. மிகப் பெரிய செல்வமும் செல்வாக்கும் பெற்றவன் பிறரிடம் சினம் (கோபம்) காட்டமாட்டான் என்பது பொய். செருக்கினால் அவன் சுடுமுகம் காட்டலாம்.
3. கள் உண்பவன் எதிலும் சோர்வடையான் - தாழ்வடையான் என்பது பொய்.